districts

img

மாநில கல்விக் கொள்கை கருத்து கேட்பு கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் கும்பல் குறுக்கு சால்!

திருப்பூர், அக்.15 - திருப்பூர் மாவட்டத்தில் மாநில கல்விக் கொள்கை கருத்து கேட்பு கூட்டங்களில், ஆர்எஸ்எஸ் கும்பல் பங்கேற்று ஒன்றிய அரசின் புதிய கல்வி  கொள்கைக்கு வக்காலத்து வாங்கிப் பிரச்சாரம் செய்தது  எதிர்ப்பையும், சல சலப்பையும் ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், தாராபுரம், மடத்துக்குளம் ஆகிய ஊர்களில் கல்வித்துறை சார்பில்  மாநில அரசின் கல்விக் கொள்கை குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. திருப்பூர் கே.எஸ்.சி அரசு ஆண்கள்  மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கல்வி  அலுவலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கல்வியாளர்கள், எழுத் தாளர் சங்கம், ஆசிரியர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்த பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  சார்பாக மாவட்ட கல்வி ஒருங்கிணைப் பாளர் கார்த்திக் மற்றும் பெருமாநல்லூர்  இணைச் செயலாளர் கார்த்திகேயன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு அறி வியல் இயக்கத்தின் கருத்து தொகுப் பினை மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்கினர். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மற்றும் மேம்பாட்டுக்கு மாநிலத்தின் பட்ஜெட்டில் 6 சதவிகிதம் நிதி ஒதுக்க  வேண்டும். அனைத்து விதமான பள்ளி களுக்கும் நிரந்தர தூய்மை பணியா ளர்கள் மற்றும் அலுவலக உதவி யாளர்கள் நியமிக்க வேண்டும். மீண்டும்  அதிகரித்து வரும் புத்தக சுமையை குறைக்க வேண்டும். எட்டாம் வகுப்பு  வரை மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இருக்கக் கூடாது. உடற்கல்வி பாடத்திற்கான முறை யான பாடத்திட்டம் மற்றும் நூல் களை உருவாக்க வேண்டும். உடற் கல்வி ஆசிரியர்கள் அனைத்து பள்ளி களிலும் நியமனம் செய்ய வேண்டும். சிறப்பு குழந்தைகளுக்கு ஆசிரியர் மற்றும் அவர்களுக்கு தனி பாடத் திட்டத்தை உருவாக்க வேண்டும் உள் பட அறிவியல்பூர்வமாக, ஆக்கப் பூர்வமான பல்வேறு ஆலோசனை களை எழுத்து மூலமாக தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ்., பாஜகவைச் சேர்ந்தோர் பங்கேற்று  ஒன்றிய அ்ரசின் கல்விக் கொள்கை நன்றாகத்தான் உள்ளது, அதையே அமல்படுத்தலாம் என்று கூறி குழப்பம்  விளைவித்தனர். இந்தியை திணிப்ப துடன், கல்வியை வணிகமயம், காவி  மயமாக்கும் ஒன்றிய அரசின் கல்விக்  கொள்கை ஏழைகளின் கல்வி வாய்ப் பை பறிக்கக்கூடியதாக உள்ளது. இந்த  நிலையில் ஒன்றிய அரசின் புதிய கல்விக்  கொள்கையை ஆர்எஸ்எஸ் கும்பல்  வக்காலத்து வாங்கிப் பேசியது  கூட்டத்தில் பங்கேற்றோர் இடையே  சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் கூட்டத்தில் பங்கேற்ற மற்ற கல்வியா ளர்கள், ஆசிரியர், பொது நல அமைப் பினர் கருத்துத் தெரிவிப்பதும் பாதிக் கப்பட்டது. மற்றவர்கள் ஆக்கப்பூர்வ மான கருத்துத் தெரிவிக்கக் கூடாது என  இடையூறு ஏற்படுத்துவதே ஆர்எஸ்எஸ்  கும்பலின் நோக்கம் என்பது இதன்  மூலம் உறுதியானது. இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற் றோர் தங்கள் கருத்துகளை எழுத்துப் பூர்வமாக  வழங்கும்படி கல்வித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். மற்றவர்களும் எழுத்துப்பூர்வமாக கருத்துகளை பதிவு செய்தனர். திருப்பூரில் மட்டுமல்லாது, பல்ல டத்திலும் இதேபோல் பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல் கருத்துக் கேட்புக்  கூட்டத்தில் பங்கேற்று குழப்பம் விளை வித்தனர். இதன்மூலம் திட்டமிட்டே அவர்கள்  மாநில அரசின் கல்விக் கொள்கை முயற்சியை சீர்குலைக்கும் வேலையில்  ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது. ஆர்எஸ்எஸ் கும்பலின் இந்த இழிவான  முயற்சியை முறியடித்து தமிழக அரசு  சரியான கல்விக் கொள்கையை உரு வாக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தெரிவித்தனர். இக்கூட்டத்தை முறையாக நடை பெற கூடாது என்றே சிலர் தங்களை மத்திய அரசின் பிரதிநிதிகளாக சொல் லிக்கொண்டு வீண் மோதல்களை உரு வாக்கினார். இதனால் கூட்டத்தை முறையாக நடத்த முடியாமல் பலரின் கருத்துக் கள் பதிவு செய்ய முடியாத நிலை உரு வானது.