திருப்பூர, டிச. 1 – இந்தியாவின் மதச்சார்பற்ற ஜன நாயக சோசலிச குடியரசு என்ற அரசி யல் சாசனத்தை தகர்க்க ஆர்எஸ்எஸ் மதவாத கும்பல் மிக நுட்பாக வேலை செய்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி வரும் தொடர் வகுப்பில் வழக்கறிஞர் வ.ராஜமாணிக்கம் கூறி னார். திருப்பூரில் பத்து நாள் தொடர் வகுப்பின் இரண்டாம் நாள் அமர்வு வியாழக்கிழமை செய்தியாளர் வே. தூயவன் தலைமையில் நடைபெற் றது. இதில் இந்திய விடுதலையும், அரசியல் சாசன உருவாக்கமும் என்ற தலைப்பில் வ.ராஜமாணிக்கம் உரையாற்றினார். அவர் பேசுகையில், மதச்சார் பற்ற ஜனநாயக அரசியல் அமைப்பை தகர்ப்பதற்கு ஆர்எஸ்எஸ் மதவெறி அமைப்பினர் நுட்பமாக வேலை செய்கிறார்கள். நமது அரசியல் சாசனம் உருவாக் கப்பட்ட 1950ஆம் ஆண்டு முதல் இது வரை 72 ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயகம் இருந்தது, வேதம், உபநிஷத்துகள்தான் ஜன நாயகத்தின் தாய் என்று வியாக்யா னம் செய்கிறார்கள்.
சுதந்திரம், சமத்துவம், சகோத ரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட நம் அரசியல் சாசனம் அந்நி யத்தன்மை வாய்ந்தது என்று சொல்லி, நிராகரிக்கின்றனர். ஆனால் இந்த கருத்துகள் பௌத் தத்தில் இருந்து பெறப்பட்டது என்று அம்பேத்கார் கூறினார். நாடாளுமன்ற, சட்டமன்ற ஜனநா யகம், கூட்டாட்சி, சுயேட்சையான நீதித்துறை, அடிப்படை உரிமைகள் ஆகியவற்றின் மீது பாஜக ஆட்சியில் தாக்குதல் நடத்துகின்றனர். அதே சமயம் காசியில் கூடிய சாமியார் கள் கூட்டம், மனுஸ்மிருதியை அடிப் படையாகக் கொண்டு சமஸ்கிரு தத்தை ஆட்சி மொழியாக்க வேண் டும் என்று கூறுகின்றனர். இது ஆர் எஸ்எஸ்சின் அடிப்படை கோட்பாடு ஆகும். இந்தியாவை வர்ணாசிரம, சாதிய நிலவுடைமை ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் புராதன இந்து கலாச்சாரத்தை மீட்பதே தங்கள் நோக்கம் என மதவா திக கூறுகின்றனர். ஆனால் தெலுங் கானா, தேபாகா, புன்னப்புரா வய லார் என நிலவுடைமை எதிர்ப்பு போராட்டங்கள் மக்களுக்கு நிலத் தையும், அரசியல் உரிமைகளையும் பெறுவதற்கு உதவியது. இவ்வாறு அவர் கூறினார். இந்த வகுப்பில் சுமார் நூறு பேர் கலந்து கொண் டனர்.