திருப்பூர், மே 14- கொரோனா பெருந் தொற்று காலத்தில் திருப் பூர் பின்னலாடை ஏற்றுமதி யாளரிடம் ரூ.4.10 கோடி பெற்றுக் கொண்டு, தரம் இல்லாத போலியான மருத் துவ கவச ஆடைகளை அமெரிக்க நிறுவனத்திற்கு அனுப்பி வைத்த கொல் கத்தாவைச் சேர்ந்த வர்த்த கரை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். திருப்பூரை சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதியாளர் பிரபு தரன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கையுறை, முகக் கவசம் உள்ளிட்ட மருத்துவ கவச உடைகளை சர்வதேச தரச் சான்றுடன் கொடுப்பதற்கு ஆர்டர் எடுத்தார். பின்னர் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்த பனியன் வர்த்தகரான சினேகாஷிஸ் முகர்ஜி (36) மூலமாக இந்த மருத்துவ ஆடைகளை கொள்முதல் செய்வதற்கு கடந்த 2019 முதல் 2020ஆம் ஆண்டு காலகட்டத்தில் தவணை முறை யில் ரூ.4 கோடியே 10 லட்சத்தை அனுப்பி வைத்தார். இதைத்தொடர்ந்து சினேகாஷிஸ் முகர்ஜி, சம்பந்தப்பட்ட ஆடைகளை பிரபுதரனுக்கு அனுப்பி வைத்தார். இந்நிலை யில், அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கையுறை,
முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ ஆடைகள் உரிய தரத்தில் இல்லை என்றும், அவை போலியான சான்றிதழ் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி அமெரிக்க நிறுவனத்தினர் பிரபு தரனுக்கு மருத்துவ ஆடைகளை திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரபுதரன், சினேகாஷிஸ் முகர்ஜியை தொடர்பு கொண்டபோது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. அதன்பிறகே போலி சான்றிதழ் தயாரித்து ஆடைகளை அனுப்பி வைத்து மோசடி செய்தது பிரபு தரனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து பிரபுதரன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2022ஆம் ஆண்டு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சினேகாஷிஸ் முகர்ஜி, அவரது மனைவி, தந்தை உட்பட 4 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறை ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் கொல்கத்தா சென்று முகாமிட்டு, மோசடி சம்பவம் தொடர் பாக சினேகாஷிஸ் முகர்ஜியை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரித்து நீதிமன்றத் தில் நேர்நிறுத்தி சனியன்று திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.