கோவை, டிச.12- கோவையில், பொது போக்கு வரத்து மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட 100% ஆயுட்கால வரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் சாலை போக் குவரத்து தொழிற்சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சாலை போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மோட்டர் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு கடந்த நவம்பர் 7 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் இயங்கக் கூடிய பழைய பொது போக்குவரத்து மோட்டார் வாகனங்களுக்கு 100% ஆயுட்கால வரி என்பதை அமல்படுத் தியுள்ளது. கொரோனா தொற்று, புதிய மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம், விலைவாசி உயர்வு, சுங்கச்சாவடி கட்ட ணம் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு என அடுத்தடுத்த தாக்கு தல்களால் மோட்டார் வாகன தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகி றது. வாகனத் தொழில் நலிவடைந்து வரும் நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ள இந்த ஆயுட் கால வரி உயர்வு, பெரும் சுமையை ஏற்ப டுத்தும். மோட்டார் வாகன தொழிலை மேலும் நலிவடைய செய்யும். எனவே, தமிழக அரசு உடனடியாக இதனை திரும்ப பெற வேண்டும் என வலியு றுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. முன்னதாக ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்கத்தின் மாநில துணை தலை வரும், கோவை மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு மற்றும் உரிமையாளர்கள்,
ஓட்டுநர் கள் சங்கத்தின் தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை ஏற்றார். இதில், எல்பிஎப் சுப்புராஜ், கிருஷ்ணசாமி, எம்எல்எப் ஜெகநாதன், ஏஐடியுசி வெங்கடாச்ச லம், பிஎம்எஸ் நாகராஜ், சிடிடிஓபிஏ கந்த சாமி மற்றும் டெம்போ டிரவலர் அமைப் பின் சலீம், இனோவோ டூரிஸ்ட் சங்கத் தின் துரை, கோச் வேன் மேக்சிகேப் சங்கத்தின் திலக் மற்றும் சாம் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்கள் கூறுகையில், ஏற்கனவே பொதுமக்கள் கையில் பண புழக்கம் இல்லாமல், எங்களின் வாகனத்திற்கு வாடகையே கிடைப்பதில்லை. கிடைக் கிற ஒருசில வாடகையிலும், இன்சூ ரன்ஸ், எப்சி, டேக்ஸ் போன்றவற்றிற்கே கப்பம் செலுத்த வேண்டியதாக உள் ளது. இதில், ஆயுட்கால நூறு சதவி கித வரி கட்ட வேண்டும் என்ப தெல்லாம் எங்களுக்கு நிச்சயம் சாத்தி யம் இல்லாத ஒன்று. எனவே, தற்போது அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கான இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம். ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை தமிழக போக்குவரத்து அமைச்சர், ஆனையாளர் உள்ளிட்ட துறைசார்ந் தவர்களுக்கு அனுப்பியுள்ளோம். எங்க ளின் நியாயமான கோரிக்கைகள் நிறை வேற்றப்படவில்லை என்றால், அடுத்த கட்டமாக முற்றுகை போராட்டம், வாக னத்தை முடக்கும் போராட்டம் உள்ளிட்ட அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங் களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.