கோவை, ஆக.20- கோவையில் காவல் அதிகாரிகள் போல் நடித்து நகை கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை விமான நிலையம் அருகே ஐபிஎஸ் அதிகாரி மற்றும் காவலர் போல் வேடமணிந்து, ஒரு வரை கடத்திச்சென்று, அரை கிலோ தங்கச்சங்கிலியை கொள்ளைய டித்த 4 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.மகேந்தி ரன் (28), அவரது நண்பர்களான ராம நாதபுரம் மாவட்டத்தைச் மகேஸ் வரன் (28), யு.குருதேவ் (27), உ.திரு மூர்த்தி என்ற குருமூர்த்தி என்பது தெரியவந்தது. இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் மாநகர காவல் உதவி ஆணையர் பார்த்திபன் செய் தியாளர்களிடம் கூறுகையில், சென் னையில் உள்ள தனியார் நிறுவனத் தில் மகேந்திரன் பணியாற்றி வந்தார். இவரது நண்பரான மகேஸ்வரன், சென்னையில் உள்ள நான்கு சக்கர வாகனப் பட்டறையில் மேற்பார்வை யாளராகப் பணியாற்றி வந்தார். திரு மூர்த்தி பள்ளிக்கரணையில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். மகேந்திரனின் மூத்த சகோ தரர் தேவேந்திரன், சிங்கப்பூரில் பணி புரிந்து வருவதால், 500 கிராம் எடை யுள்ள 6 தங்கச் சங்கிலிகளை பயணி யிடம் கொடுத்து, ஆகஸ்ட் 3 ஆம் தேதி யன்று திருச்சியைச் சேர்ந்த அப்துல் ரசாக் (47) என்பவரிடம் தங்கச் சங்கி லியை ஒப்படைக்கச் சொன்னார். இதுகுறித்து மகேந்திரனுக்குத் தெரியவந்தது. மேலும், அப்துல் ரசாக் கிடம் இருந்து தங்கத்தை கொள்ளை யடிக்க முடிவு செய்துள்ளனர்.
மகேஸ் வரன் தனது இரு சகோதரர்களையும் கோவை விமான நிலைய பகுதிக்கு அழைத்து வந்தார். இதனிடையே இந்த கும்பல் சென்னையில் உள்ள ஒரு கடையில் காவலர் சீருடைகள், ஐபிஎஸ் பேட்ஜ்களை வாங்கியதாக வும், மகேஸ்வரன் ஐபிஎஸ் அதிகாரி யின் சீருடையையும், அவரது தம்பி கான்ஸ்டபிளின் சீருடையையும் அணிந்திருந்து, பல்நோக்கு வாக னத்தை வாடகைக்கு எடுத்து, ஆக.3 ஆம் தேதி இரவு 8.15 மணியளவில் விமான நிலைய சாலை அருகே 500 கிராம் தங்கச் சங்கிலிகளுடன் அப் துல் ரசாக்கை கடத்திச் சென்றனர். தங்கச் சங்கிலிகளை ஒப்படைக்கும் படி கூறினர். அப்துல் ரசாக் மறுத்த தால், அவரை கொன்று விடுவோம் என அந்த கும்பல் மிரட்டியது. இதன் பின், தங்கச் சங்கிலிகளை கொள்ளை யடித்த கும்பல், அவரை ஈரோடு மாவட்டம், பவானியில் விட்டுச்சென் றது. இதுதொடர்பாக அப்துல் ரசாக் பீளமேடு காவல் நிலையத்தில் புகார ளித்தார். அதன்பேரில் போலீசார் அந்த கும்பல் மீது இந்திய தண்டனை சட்டம் 170, 365, 387 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தனிப் படை அமைக்கப்பட்டு, அந்த கும் பலை போலீசார் கைது செய்து, 500 கிராம் தங்கச்சங்கிலிகளை மீட்டனர். இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இவ்வாறு பார்த்திபன் தெரிவித்தார்.