districts

img

சேறும், சகதியுமாக மாறிய சாலைகள்

நாமக்கல், நவ.16- சேறும், சகதியுமாக மாறிய சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க் சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை வட்டம், சேலூர் நாடு, வெள் ளக்கல் ஆறு முதல் வண்ணாங்கி ராய்பட்டி, குழிப்பட்டி வழியாக வீர கனூர் வரை சாலை ஒன்று செல் கிறது. பல வருடங்களாக சேதம டைந்து காணப்படும் இச்சாலை, தற்போது பெய்த மழையால் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனை விரைந்து சீரமைத்து, தார்ச்சாலையாக தரம் உயர்த்த  வேண்டும் என வலியுறுத்தி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலூர் நாடு, ஊர்முடிபட்டி  குழிப்பட்டி, வீரகனூர் கிளைகள் சார் பில் சேலூர் நாடு, ஊர்முடிப்பட்டி வண்ணாங்கிராய் நியாய விலை கடை முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் தாலுகாச் செயலாளர் எஸ்.தங்க ராசு தலைமை வகித்தார். கிளைச்  செயலாளர் இ.பன்னீர்செல்வம் முன் னிலை வகித்தார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன், நிர்வாகிகள் வி. கே.வெள்ளைச்சாமி, எஸ்.கே. மாணிக்கம், கே.வி.ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, போராட் டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற் றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினரோடு, கொல்லிமலை வட்டார  வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த் தைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனைக் கண்டித்து, வண்ணாங்கி ராய் கிராமத்திலிருந்து நடைபயண மாக செம்மேடு ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தை நோக்கி போராட்டக் குழுவினர் சென்றனர். மணப்பாறை சந்தை அருகே வந்த போராட்டக் குழுவினரிடம், கொல்லிமலை மண் டல வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணி, ஊராட்சி மன்றத்  தலைவர் தனசேகர், துணைத்தலை வர் கே.கே.பழனிச்சாமி, வாழவந்தி நாடு காவல் உதவி ஆய்வாளர் குமார், சிறப்பு காவல் உதவி ஆய் வாளர் மோகன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத் தின் கீழ், 2024 - 25 ஆம் ஆண்டிற் கான திட்ட அறிக்கை தயார் செய் யப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள் ளது. மேற்படி சாலையை உடனடி யாக தரம் உயர்த்துவதற்கு மாவட்ட  ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக  உள்ளாட்சி முகமையின் திட்ட இயக் குநரின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று, இரண்டு மாதத்திற்குள் சாலை அமைக்க உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்படும், என  எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக  கைவிட்டு கலைந்து சென்றனர்.