திருப்பூர்,நவ.30- திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் ரூ. 6.20 கோடி மதிப்பீட்டில் சாலை பணி களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமி நாதன் வியாழனன்று துவக்கி வைத்தார். காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பாலசமுத்திரம்புதூர் ஊராட்சி, தொட்டிபாளையம் அருகில் ரூ.6.20 கோடி மதிப்பீட் டில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட் டத்தின் கீழ் கோபி-ஊத்துக்குளி படியூர் சாலையில் நொய்யல் ஆற்றுப்பாலம் முதல் சிவகிரி வரை இருவழித்தடமாக அகலப் படுத்துதல், ஊறுதிப்படுத்தல் மற்றும் சிறுபாலத்தினை திரும் பக்கட்டுதல் பணியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்து றை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழனன்று மாவட்ட ஆட் சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் (நெடுஞ்சா லைத்துறை) ரமேஷ் கண்ணன், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், இளநிலை பொறியாளர் சாமியப்பன், உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.