சேலம், ஆக.18- 41 மாதத்தை பணி காலமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு சாலைப் பணியாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கத்தின் 4ஆவது கோட்ட மாநாடு ஓமலூரில் நடை பெற்றது. இம்மாநாட்டிற்கு, பே.மாணிக்கம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சு.செந்தில்நாதன் துவக்கி வைத்தார். கோட்டச் செயலாளர் தா.கலைவாணன் அந்தோணி, பொரு ளாளர் மு.தங்கராசு ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். மரணமடைந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதிகளுக்கு ஏற்ப நெடுஞ்சாலை துறையிலேயே முன்னுரிமை அளித்து பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தநாரி ஆகியோர் வாழ்த்துரையாற் றினர். கோட்டத் தலைவராக மு.தங்கராசு, செயலாளராக தா. கலைவாணன் அந்தோணி, துணைத் தலைவராக கோட்டப் பொறியாளர் கா. மாரியப்பன் உள்ளிட்ட இணை செய லாளர்கள், தணிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.