districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், டிச. 6- நெடுஞ்சாலை கட்டுமான தலைமைப் பொறியாளரின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து சாலைப்பணியா ளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை  பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு எடப்பாடி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோட்டத் தலைவர் மு.தங்க ராசு, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், சாலைப்பணியாளர் சங்க மாநிலத் துணைத்தலைவர் சிங்க ராயன், கோட்டச் செயலாளர் கலைவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி இதேபோன்று, பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோட்டத் தலை வர் எம்.வெற்றிவேல், செயலாளர் ச.ஜெகநாதன்  பேசினார்.  அரசு ஊழியர் சங்க பொள்ளாச்சி வட்டத் தலைவர் பத்ம நாபன், பொது நூலகத்துறை அலுவலர் சங்க மாநிலப் பொரு ளாளர் மதிலரசன்  உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். 

அழுகிய நிலையில் ஆண் சடலம்

கோவை, டிச.6- பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை பகுதியில் யானைப் பாகனின் உடல் அழுகிய நிலையில் இறந்த கிடந்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சேத்து மடை மணக்கடவு அம்மன் கோவில் பகுதியில் வழக்க மான ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் துர்நாற்றம் அதிகம் வீசியுள் ளது. இதனால், சந்தேகமடைந்த வனத்துறையினர், துர் நாற்றம் வீசிய பகுதியில் சோதனை செய்ததில், ஆண் சடலம்  ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து ஆனை மலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட னர். இதில் இறந்து கிடந்தவர் டாப்சிலிப் கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள முத்து யானையின் பாகன் ராஜ்குமார் (35) என்பதும், அவர் சேத்துமடை அண்ணா  நகர் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. கடந்த 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சேத்துமடையில் இருந்து கோழிகமுத்தி முகாமை சேர்ந்த சிலருடன் ஜீப் பில் ராஜ்குமார் சென்றதாக கூறப்படுகிறது. சோதனை சாவடி  தாண்டி சென்ற போது திடீரென்று ராஜ்குமார் ஜீப்பில் இருந்த வர்களிடம் தகராறு செய்ததாகவும், இதனால் அவரை அங்கேயே இறக்கி விட்டு சென்றதும் போலீசார் விசார ணையில் தெரியவந்தது. இந்நிலையில், போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  பிரேத பரிசோதனைக்காக ராஜ்குமாரின் உடலை கோவை  இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்குக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே ராஜ்குமார் இறந்ததற்கான முழுவிவரமும் தெரியவரும் என போலீ சார் தரப்பில் தெரிவித்தனர்.

நாமக்கல்லில் சித்த மருத்துவமனை: ஆட்சியர் தகவல்

நாமக்கல், டிச.6- நாமக்கல் பழைய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக் கட்டடம், 60 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ மனையாக மாற்றம் செய்யப்படுவதாக ஆட்சியர் தெரிவித் துள்ளார். நாமக்கல்-மோகனூா் சாலையில் இயங்கி வந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ. 159 கோடியில் கட்டப்பட்ட புதிய  மருத்துவமனை கட்டடத்திற்கு கடந்த வாரம் மாற்றம் செய்யப் பட்டது. தற்போது பழைய மருத்துவமனை கட்டடம் முழுமை யாக காலியாக செய்யப்பட்டுள்ளது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு  மையம், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் அலு வலகம், சித்த மருத்துவமனை மட்டும் இயங்கி வருகிறது. இந்த நிலையில், பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தை 60  படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவமனையாக மாற் றம் செய்யப்படவுள்ளது. இதற்கான ஒப்புதல் மக்கள் நல்வாழ்வுத் துறையால் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக மருத்துவமனை இயங்கும் பட்சத்தில் அரசு சித்த மருத்து வக் கல்லூரிக்கான அங்கீகாரம் கிடைத்துவிடும்.இதுகு றித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா கூறுகையில், நாமக்கல்  அரசு மருத்துவமனை பழைய கட்டடத்தில் 60 படுக்கைக ளைக் கொண்டு சித்த மருத்துவமனை செயல்பட உள்ளது.  இதற்கான மருத்துவா்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணி யாளர்கள் வழங்கக்கோரி மருத்துவத்துறை உயரதிகாரிக ளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. கூடுதலாக நிதி ஒதுக்கீடு  செய்யவும் வலியுறுத்தி உள்ளேன் என்றார்.

இன்று மின்தடை 

கோவை, டிச. 6- மாதாந்திர மின் பராம ரிப்பு பணிகள் காரணமாக  கோவையில் பல்வேறு பகுதி களிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (07.12 .2023) கோவையில் மின் தடை ஏற்படும் விவ ரங்களை மின்வாரியம் வெளி யிட்டுள்ளது.  சரவணம்பட்டி, அம்மன்  கோவில், சின்னவேடம் பட்டி, கிருஷ்ணாபுரம், சிவா னந்தபுரம், வெள்ளக்கிணர், உருமாண்டம்பாளையம், கவுண்டர் மில், சுப்ரமணியம் பாளையம், கே.என்.ஜி. புதுார், மணியகாரம்பாளை யம் ஒருபகுதி, லட்சுமி நகர்,  நாச்சிமுத்து நகர், ஜெயப்பி ரகாஷ் நகர், கணபதிபுதுார், உடையாம்பாளையம் பகுதி களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என  அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பு: சென்னைக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பிவைப்பு

திருப்பூர், டிச.6- மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைக்கு திருப் பூர் மாவட்டத்தில் இருந்து தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்ட அத்தி யாவசிய பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. மிக்ஜம் புயலின் காரணமாக சென்னையின் பல்வேறு  பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டு பெரும் பாதிப்புக்கு உள் ளானது. இதனால், அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு அத்தி யாவசிய பொருட்கள் கிடைப்பதில் இடையூறு ஏற்பட்டுள் ளது. இதைதொடர்ந்து, திருப்பூரிலிருந்து தண்ணீர், பிஸ்கட்,  சானிடரி நாப்கின் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சென்னை மக்களுக்கு அனுப்பப்பட்டது. பல்வேறு இடங்க ளில் சேகரிக்கப்பட்ட தண்ணீர் கேன், பிஸ்கட் உள்ளிட்ட  அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் சேகரிக்கப்பட்டு கண்டெய்னர் லாரிகளில் செவ்வா யன்று அனுப்பப்பட்டது. 2 கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப் புவதற்காக தயார் செய்யப்பட்டு வருகிறது.

அம்பேத்கர் நினைவு தினம் கடைப்பிடிப்பு

திருப்பூர், டிச.6- அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் காம ராஜ் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாநகராட்சி மேயர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் புதனன்று நாடு முழு வதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு,  திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , ஆணையாளர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர்  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்,  ஆதித்தமிழர் சனநாயக பேரவை, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட  கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

திருப்பூர், டிச.6- குண்டடம் கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவர்  வனிதா, பீலிக்காம்பட்டி மருத்துவமனை உதவி மருத்துவர் மோகன்ராஜ், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுமதி  உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் 150 க்கும் மேற்பட்ட கால் நடைகளுக்கு சிகிச்சை மற்றும் மாடு வளர்ப்போருக்கு ஆலோசனைகளை வழங்கினர். இதில், குடற்புழு நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சினைப் பரிசோதனை உள் ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. மேலும் சிறந்த கிடாரி கன்றுகளுக்கான போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங் கப்பட்டன. இந்தப் பரிசுகளை பேட்டைக்காளிபாளையம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன், குண்டடம் ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகா் ஆகியோர் வழங்கினர். இந்த முகாமில் ஜோதியம்பட்டி ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் தங்களின் கால்நடைகளைக் கொண்டு வந்து சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்து கொண்டனர்.

பெண் ஆசிரியரை தாக்கிய மாணவன்

திருப்பூர், டிச.6- பள்ளி மாணவன் ஒருவன் பெண் ஆசிரியரை தாக்கிய சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  திருப்பூர் மாநகராட்சி நல்லூர் அடுத்த விஜயாபுரம் பகுதி யில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் (10ம் வகுப்பு சமூக அறிவியல் ஆசிரியை) செவ்வாயன்று வழக்கம் போல பெண்  ஆசிரியர் பாடம் எடுத்துள்ளார். அப்போது பின் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் இருவர் சட்டையில் ஒருவர் மீது  ஒருவர் இன்க் அடித்துக் கொண்டு டேபிளை தள்ளியும் ரக ளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பணியில் இருந்த பெண் ஆசிரியர் மாணவனை கண்டிக்க அருகில் சென்றுள் ளார். அப்போது குறிப்பிட்ட மாணவன் ஆசிரியை எதிர்பார்க் காத தருணத்தில் அவரது முடியை பிடித்து டேபிளில் சாய்த்து  முதுகில் பலமாக தாக்கி உள்ளார். இதில் பெண் ஆசிரியர் நிலைகுலைந்து சரிந்துள்ளார். மற்ற மாணவ, மாணவிகள் இணைந்து குறிப்பிட்ட மாணவனை விளக்கி உள்ளனர். பின் னர் மற்ற ஆசிரியர்கள் வந்து மாணவனின் பெற்றோரை அழைத்து தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளியில்  விசாரணை மேற்கொண்டார்‌. மேலும் நல்லூர் காவல் நிலைய  போலீசாரும் பள்ளியில் மாணவன் பெண் ஆசிரியரை தாக்கி யது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிவேகமாக வாகனங்களை இயக்கக்கூடாது

அவிநாசி, டிச.6- கோவையைச் சேர்ந்த சந்தோஷ் குமார், அவரது மனைவி  இந்துமதி, 6 மாத பெண் குழந்தை காஜல் ஆகியோர் கடந்த  மாதம் நவம்பர் 13 ஆம் தேதி ஈரோடு நோக்கி காரில் சென்று  கொண்டிருந்தனர். பெருமாநல்லூர் அருகே சென்ற போது  அதே வழியாக பின்னால், வந்த சொகுசு கார் மோதி விபத்துக் குள்ளானதில், சந்தோஷ்குமார், குழந்தை காஜல் உயிரிழந் தனர். இது குறித்து பெருமாநல்லூர் போலீஸார், சொகுசு கார்   ஓட்டி வந்த கோவை சேர்ந்த சித்தார்த் (22) மீது வழக்குப்பதிவு  செய்து கைது செய்தனர். இந்நிலையில் அவிநாசி வட்டார போக்குவரத்து ஆய் வாளர் பாஸ்கரன், சொகுசு காரை செவ்வாய்க்கிழமை ஆய்வு  மேற்கொண்டார். ஆய்வுக்கு பின், ஓட்டுநர் சித்தார்த் விபத்து  ஏற்படும் விதமாக வாகனத்தை இயக்கி உயிரிழப்பு ஏற்படுத்தி யதால், அவர் மீது ஐபிசி304(2) பிரிவின்படி போலீஸார் வழக் குப்பதிவு செய்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு பிறகு ஓட்டு நருக்கு அதிக பட்ச தண்டனையாக 10 ஆண்டு சிறை தண்டனை  விதிக்க வாய்ப்புள்ளது. ஆகவே பொதுமக்கள், வாகன ஓட்டி கள் சாலையில் செல்லும் போது, அதிக வேகமாகவும், அஜாக் கிரதையாகவும் வாகனங்களை இயக்கக் கூடாது. என அறிவு றுத்தியுள்ளார்.

நலத்திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருப்பூர், டிச.6- அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட் சியர் தா.கிறிஸ்துராஜ் செவ்வாயன்று ஆய்வு மேற்கொண் டார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட போத்தம்பாளையம் மற்றும் தட்டனூர் ஊராட்சி பகுதிக ளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.1.71 கோடி மதிப் பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் செவ்வாயன்று ஆய்வு  மேற்கொண்டு, இத்திட்டப்பணிகளை தரமாகவும், விரைவாக வும் குறித்த காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு  அறிவு றுத்தினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் திட்ட இயக்குநர் அ.லட்சுமணன் அவர்கள், அவிநாசி  வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், அவிநாசி வட்டாட்சி யர் மோகனன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து  கொண்டனர்.

டிச.9 தேசிய மக்கள் நீதிமன்றம்

திருப்பூர், டிச.6- திருப்பூர் மாவட்ட நீதிமன்றங்களில் வரும் டிச.9 தேசிய  மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேசிய மற்றும் தமிழக சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தர வின்பேரில், திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சொா்ணம் ஜெ.நட ராஜன் வழிகாட்டுதலின் பேரில், திருப்பூர் மாவட்ட நீதிமன் றங்களில் வரும் சனிக்கிழமை (டிசம்பா் 9) தேசிய மக்கள்  நீதிமன்றம் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்ட நீதிமன்ற  வளாகத்தில் 8 அமர்வுகளும், அவிநாசி, காங்கயம், பல்லடம், தாராபுரத்தில் 2 அமர்வுகள், உடுமலையில் 4 அமர்வுகள் என  மொத்தம் 20 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இதில், நிலு வையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில்  வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்பநல வழக் குகள், சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், நில அபகரிப்பு  வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள் நடத்த சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், டிச.6- அரசின் நலத் திட்டங்களைப் பெற சிறப்பு முகாம்களை நடத்த சிபிஎம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் வேலம்பாளையம் நகரச்செயலா ளர் ச.நந்தகோபால், மாவட்ட நிர்வாகத்தி டம் செவ்வாயன்று அளித்த மனுவில் கூறியுள் ளதாவது, மக்களுக்காக பல்வேறு நலத் திட் டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வரு கிறது. குறிப்பாக, சமூகநலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஏராளமா னோர் பயனடைந்து வருகின்றனர். எனினும்,  இந்தத் திட்டங்களின் பலன்களைப் பெறு வதற்காக நாள்தோறும்அரசு அலுவல கங்களுக்கு மக்கள் நடக்க வேண்டியுள்ளது. இதனால், மனித உழைப்பு வீணாவதுடன், காலவிரயமும், பெரும் அலைக்கழிப்பும், பண இழப்பும் ஏற்படுகிறது. திருப்பூர் மாநகராட்சியின் முதலாம்  மண்டலத்துக்கு உட்பட்ட வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், ரங்கநாதபுரம், பெரி யார் காலனி ஆகிய பகுதிகளில் பெற்றோரை  இழந்த குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை திட்டத்துக்காக 10 க்கும் மேற்பட்டோர் காத்திருப்பது தெரியவரு கிறது. இதுமட்டுமின்றி, முதியோா் உதவித் தொகை பெற முடியாமல் பலர்  அவதிக்குள் ளாகி வருகின்றனர். எனவே, சமூகநலத் துறை சார்பில் வழங்கப்படும் திட்டங்களை மக்களி டம் கொண்டு சேர்க்கும் வகையில், திருப் பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்திற் குட்பட்ட வேலாம்பாளையம், அனுப்பர் பாளையம், ரங்நகராதபுரம்,  பெரியார் காலனி உள்ளிட்ட பகுகளில் குறிப்பிட்ட கால இடை வெளியில் சிறப்பு முகாம்களை நடத்த வேண் டும் என குறிப்பிட் டுள்ளது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரக்குகுழு உறுபபினர் ஆர். சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இன்று மின்தடை

உடுமலை, டிச.6- உடுமலைப்பேட்டை துணை மின் நிலையத்திற் குட்பட்ட மின்பாதைகளில் வியாழனன்று (இன்று)பரா மரிப்பு பணிகள் நடைபெற  உள்ளது. இதனால் உடுமலை  நகரம், பழனிபாதை, தங்க மாள் ஓடை, இராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர். வேலூர், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, பொட்டயம் பாளையம், பொட்டிநாயக்க னுர், சோமவாரம்பட்டி, ஏரிப் பாளையம், புக்குளம், குறிச் சேரி, சின்னவீரம்பட்டி, சங்கர் நகர், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி,  பள்ளபாளை யம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோ கம் இருக்காது.

கோவை: பிரபல உணவகத்துக்கு அபராதம்

கோவை, டிச.6- உணவகத்தின் பெயருடன் வழங்கப்பட்ட உணவு பார்சலுக்கு கட்டணம் வசூலித்த பிரபல உணவகத்திற்கு அபராதம் விதித்து கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, காந்திபுரம் பகுதியை சேர்ந்த வர் சேக்முகமது (34). இவர் கோவை சட்டக் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வருகி றார். இந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் வடவள்ளி பகுதியில் உள்ள  பிரபல தனியார் (ஆனந்தாஸ்) உணவகத் தில், பிரைடு ரைஸ் உணவு வாங்கியுள்ளார். அதன் விலை ரூ.160 ஆக இருந்த நிலையில், பார்சல் செய்து கொடுத்த கண்டைனருக்கு ரூ.5.71 கூடுதலாக கட்டணம் வசூல் செய் துள்ளனர். கூடவே, கண்டைனரில் அந்த உண வகத்தின் பெயர் இலச்சினை (LOGO) இடம் பெற்றிருந்தது. உணவு பார்சல் கொடுத்த கண்டைனருக்கு கட்டணம் வசூல் செய்தது  மட்டுமில்லாமல், அதில் உள்ள அவர்களது நிறுவன லோகோ மூலம் தன்னை விளம்பர ஏஜென்டாக பயன்படுத்தியதாக கூறி, இதற்கு விளக்கம் கேட்டு சேக்முகமது அந்த தனி யார் உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி னார். ஆனால், அந்நிறுவனம் சார்பில் எந்த  விளக்கமும் அளிக்கவில்லை.  இந்நிலையில், சேக்முகமது கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். கடந்த ஓராண்டாக வழக்கு  நடைபெற்று வந்த நிலையில், அந்த தனியார் உணவகம், வாடிக்கையாளர்களுக்கு கொடுக் கும் உணவு பார்சல் கண்டைனரில் உணவகத்தின் லோகோ-வை பயன்படுத்த கூடாது என நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் வாடிக்கை யாளரான சேக் முகமதுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவீனமாக ரூ.5 ஆயிர மும் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத் தரவிட்டார்.

சேலம்: ரூ.2.05 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

சேலம், டிச.6- சேலம் புத்தகத் திருவிழாவில் ரூ.2.05 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ள தாகவும், 2.36 லட்சம் பேர் பார்வையிட் டுள்ளதாக ஆட்சியர் செ.கார்மேகம் தெரி வித்தார். சேலம் புதிய பேருந்து நிலையம்  அருகில் உள்ள மாநகராட்சித் திடலில்  கடந்த நவ. 21 ஆம் தேதி தொடங்கிய புத் தகத்திருவிழா, புதனன்றுடன் (டிச. 6)  நிறைவடைந்தது. இதனிடையே, புத் தகத்திருவிழா சிறப்பாக அமைய உறுதுணையாக இருந்த அனைவருக் கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும்  நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் செ.கார்மே கம் கலந்து கொண்டு பாராட்டுச் சான்றி தழ்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர் கள், மாவட்ட நிர்வாகம் ஒருங்கி ணைந்து இந்த புத்தகக் கண்காட்சியை நடத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் இந்த புத்தகக் கண்காட்சி அமைத்திட நிதியு தவி வழங்கியுள்ளதற்கு பாராட்டுக ளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விழா வில் முன் எப்போதுமில்லாத வகை யில் வாசிப்பாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெரியவர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பி னரும் பயன்பெறும் வகையில், உலகின் தலைசிறந்த ஓவிய அரங்குகள், புகைப் படக் கண்காட்சி, உலக விருதுகள் பெற்ற புத்தகங்கள், திரையரங்குகள், கோளரங்கம் என பல்வேறு அரங்குகள் அமைக்கபட்டுள்ளன. சேலம் மாவட்டத்தின் வரலாறு குறித்த புத்தகங்களைக் கொண்டு ஓர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இப் புத்தகத் திருவிழாவில் உலகின் தலை சிறந்த புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.  சாகித்ய அகாதெமி விருது பெற்ற புத்த கங்கள், ஞானபீட விருது பெற்ற புத்த கங்கள் என பல்வேறு விருது பெற்ற  புத்தகங்கள் இங்கு காட்சிப்படத்தப் பட்டிருக்கின்றன. புத்தகத் திருவிழா வில் 1,03,436 பள்ளி மாணவ, மாணவிக ளும், 6,556 கல்லூரி மாணவ, மாணவி களும், 4,332 ஆசிரியர்கள், 1,22,121 பொதுமக்கள் என மொத்தம் 14 நாட் களில் 2,36,446 நபர்கள் பங்கேற்று பயன் பெற்றுள்ளனர். மேலும், 1,74,120 புத்த கங்கள் ரூ.2.05 கோடி மதிப்பீட்டில் விற்பனையாகியுள்ளன. சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோபல் பரிசு பெற்ற புத்தகங்கள் காட்சிப்படுத்தப் படும், என்றார். இந்நிகழ்ச்சியில், சேலம் மாநக ராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் பெ. மேனகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரேசன் அரிசி கடத்தல்

தருமபுரி, டிச.6- தருமபுரி மாவட்டம், பாலக் கோடு - காவேரிப்பட்டணம் சாலையில் காவல் துறையி னர் ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது எலுமிச் சனஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகே அவ்வழியாக வந்த  ஒரு சரக்கு வாகனத்தை  நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேசன் அரிசி இருப் பது தெரியவந்ததையடுத்து போலீசார், ஓட்டுநர் மற்றும் உடனிருந்த நபரிடம் விசா ரணை நடத்தினர். இதில் இரு வரும் காரிமங்கலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அணில் ரகு மான் (28), முக்குளத்தைச் சேர்ந்த கணேசன் (30) என்ப தும் தெரியவந்தது. இருவ ரும் ரேசன் அரிசி கடத்தலில்  ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து இருவரும் கைது  செய்யப்பட்டனர்.