கோவை, ஜூன் 11- ஓய்வுபெற்றவர்களை பணியில் அமர்ந்தும் நெடுஞ்சாலைத்துறை நிர் வாகத்தை கண்டித்து, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியா ளர் சங்கத்தினர் கோவையில் கோட்ட பொறியாளர் அலவலகம் முன்பு கருப் புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப் பட்டனர்.
மாவட்டத் தலைவர் முருகேசன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ், அன் னூர் செயலாளர் மெய்யப்பன், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாநிலச் செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட இணைச் செயலாளர் வெள்ளியங்கிரி மாவட்ட துணைத் தலைவர் விஸ்வநா தன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர்.
உதகை
இதேபோன்று, நீலகிரி மாவட்டம், உதகை கோட்டப் பொறியாளர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மாவட்டத் தலைவர் ராஜேந் திரன் தலைமை ஏற்றார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் இஸ்ரவேல், மாவட்ட துணைத் தலைவர் கனகரத்தி னம், மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ், இணைச்செயலாளர் குன பாண்டியன், மாவட்ட செயலாளர் அற் புதராஜ் ரூஸ்வெல்ட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்