கோபி, ஆக.31- கோபி அருகே ரூ.27 கோடி மதிப் பீட்டில் நடைபெறும் சாலைவிரிவாக்க பணிகள் குறித்து நெடுஞ்சாலைதுறை கண்காணிப்புப் பொறியாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள சத்தி - அத் தாணி சாலை முக்கிய சாலையாக உள் ளது. போக்குவரத்து வாகனங்கள் அதி கமாக காணப்படும். இச்சாலையில் வாகன விபத்துகளை தவிர்க்கும் வகை யிலும் போக்குவரத்து இடையூறு இன்றி செல்லும் வகையில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு உள்கட்டமைப்பு நிதி யின் மூலமாக ரூ.27கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது . இந்நிலையில் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் சாலையின் தரம் குறித்து கோவை நெடுஞ்சாலைதுறை கண்காணிப்புப் பொறியாளர் ரமேஷ் தலைமையில் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வின்போது தாசப்பகவுண்டன் புதூர், ஏளூர், அரக்கன்கோட்டை, டி. என்.பாளையம், பங்களாபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர். சாலை தரமாக அமைத்துள்ளனரா, சாலையின் நீள அகல அளவுகள் குறித்த அளவு களின் உள்ளதா நேரில் ஆய்வு செய் தார். இதனையடுத்து சாலைவிரிவாக்க பணிகளில் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நெடுஞ் சாலைதுறையினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது கோபி கோட்ட பொறி யாளர், சத்தி உதவிகோட்ட பொறியா ளர், கோபி உதவி கோட்ட பொறியாளர் மற்றும் நெடுஞ்சாலை அலுவலர்கள் உடனிருந்தனர்.