ஈரோடு, மே 22- சிஐடியு சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்கத்தின் 9 ஆவது மாநாடு ஞாயி றன்று ஈரோட்டில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.செல்வராஜ் தலைமை வகித் தார். மாவட்ட துணை தலைவர் வி.சதாசிவம் கொடியேற்றினார். சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில பொருளா ளர் வி.குப்புசாமி தொடக்கவுரையாற்றி னார். சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ர மணியன், மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் கே.மாரப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் சிஐடியு மூத்த தலைவர்கள் கே.துரைராஜ், ப.மாரிமுத்து ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப் பட்டனர். இறுதியாக, ஏ.முருகானந்தம் நன்றி கூறினார். முன்னதாக, மோட்டார் வாகன தொழில், தொழிலாளர்களின் வாழ்வை சீர ழிக்கும் 2019 மோட்டார் வாகன சட்ட திருத் தத்தை கைவிட வேண்டும். ஆன்லைன் அப ராதம் விதிக்கக் கூடாது. அநியாய இன்சூ ரன்ஸ் கட்டண உயர்வைக் கைவிட வேண்டும். சுங்க சாவடி கட்டணங்களை குறைப்பதோடு காலாவதியான சுங்க சாவடிகளை நீக்க வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் ஆகியவை ஜி எஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். சாலை விபத்தில் உயிரிழக்கும் ஓட்டுநர் களுக்கு நலவாரியம் மூலம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனப்பல தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
தலைவராக எஸ்.தனபால், செயலா ளராக பி.கனகராஜ், பொருளாளராக ஏ.முரு கானந்தம் மற்றும் 15 பேர் நிர்வாகிகளாக வும், 40 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது.