அவிநாசி தொட்களம்புதூர் பகுதியில் சாலை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய மேலாளரை சந்தித்து சிபிஎம் சார்பில் மனு அளித்தனர். இதில் விதொச மாவட்ட தலைவர் சண்முகம், மற்றும் தமுஎகச அவிநாசி ஒன்றிய நிர்வாகி அருண், சிஐடியு சங்கத்தின் கிளை செயலாளர் சரவணன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.