districts

img

குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து சாலை மறியல்

பொள்ளாச்சி, ஜூலை 22- பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலக்குறிச்சி பகுதியில் கடந்த  ஒரு மாதகாலமாக குடிநீர் விநியோ கிக்காததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அங் கலக்குறிச்சி ஊராட்சியில் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்க ளின் குடிநீர் ஆதாரமாக நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  ஆழியார் அணையிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில், கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிக் காக பொதுப்பணித்துறை அதிகாரி கள் சாலையின் இருபுறமும் குழி  தோண்டி உள்ளனர். இதன்காரண மாக பிரதான குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்து வருகி றது. இதுதொடர்பாக பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் பொது மக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் வெள்ளி யன்று பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள நான்கு முக்கு சுங்கம் பகுதியில் திடீரென  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையி னர், பொதுப்பணித்துறை அதிகாரி கள், காவல்துறையினர் போராட் டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது, சாலை விரிவாக்கத்திற்காக பணிகள் நடைபெற்ற போது தவறுதலாக குழாய் உடைந்துள்ளது. எனவே, விரைந்து குடிநீர் குழாய்களை மாற்றி குடிநீர் விநியோகத்தை சீர் படுத்துவதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.