districts

img

சீரான குடிநீர் விநியோகம் கேட்டு சாலை மறியல்

ஈரோடு, ஜன.7-  ஈரோட்டில் சீரான குடிநீர் விநியோகம் கேட்டு, காலிக்  குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகராட்சி 1 ஆவது மண்டலத்தில் உள்ள  6ஆவது வார்டில் ஞானபுரம், பச்சைபாளிமேடு பகுதிக ளில் கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகிப்பதில் பிரச்சனை இருந்துள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை  மிகக் குறைந்த நேரம் மட்டுமே திறந்து  விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலை யில் தொடர்ந்து மூன்று வாரத்திற்கு மேல் இதே நிலை நீடித்ததால் இப்பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக் கள் காலிக் குடங்களுடன் ஞாயிற்றுக்கி ழமை காலை திடீரென கனிராவுத்தர்குளம் பகுதியில் உள்ள ஈரோடு - சக்தி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், ஈரோட்டில் இருந்து சத்திய மங்கலம் செல்லும் வாகனங்கள், அதே போல் சத்தியமங்கலம், கோபியில் இருந்து  ஈரோட்டுக்கு வந்த வாகனங்கள் சாலை யின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. இதுகுறித்து தகவல்  அறிந்து வந்த ஈரோடு வீரப்பன் சத்திரம்  காவல் துறையினர், வட்டாட்சியர் ஜெயக் குமார், வார்டு கவுன்சிலர் தமிழ்பிரியன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் விநியோகிக்கப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதில் பிரச் சனை இருப்பதாகவும், அதை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என  அதிகாரிகள் கூறினர். இதனை ஏற்று பொது மக்கள் தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்ற னர்.