ஈரோடு,பிப்.1- புஞ்சை புளியம்பட்டி அருகே குளத்தில் சாய கழிவுநீர் கலப்பதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம்,புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் 75 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதி யில் உள்ள சிறிய அளவிலான சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி ஓடை வழி யாக நல்லூர் குளத்தில் கலந்து வரு கிறது. இதனால் அந்த நீரை குடிக் கும் கால்நடைகள் நோய் தாக்கு தலுக்கு உள்ளாகி வருவதாக அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதைத் தொடர்ந்து நல்லூர் குளத்தில் சாய கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் மனு அளித்தனர். எனினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சத்திய மங்கலம்- கோவை தேசிய நெடுஞ்சா லையில் உள்ள நல்லூர் பேருந்து நிறுத் தம் அருகே திங்களன்று நல்லூர் குளத் தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவ டிக்கை எடுக்கக்கோரி சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் வட் டாட்சியர் ரவிசங்கர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், குளத்திற்கு வரும் சாய கழிவுநீரை தற்காலிகமாக மண் கொட்டி தடுக்கப்ப டும். புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி பகு தியில் இருந்து வரும் கழிவுநீரில் சாய நீர் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்்கப் பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.