districts

img

3 மாதங்களாக ஊதியம் இல்லை

ஈரோடு, அக்.7- நூறு நாள் வேலைத்திட்டத்தில் மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து மொடக்குறிச்சி ஒன்றியத்தில் விவசாய தொழிலாளர்கள் சாலை மறியலில்  ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றி யத்தில் பல கிராமங்களில் தேசிய கிராமப் புற வேலை உறுதி திட்டத்தில் விவசாய தொழி லாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம்  வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப் பட்ட தொழிலாளர்கள் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செய லாளர் டி.தங்கவேல் தலைமையில், எழுமாத்தூர் பகுதியில் சாலை மறியலில் ஈடு பட்டனர். இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் போராட் டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். போராட்டத்தைக் கைவிட்டு நடத்திய பேச்சுவார்த்தையில் 20 நாட்களில் நிலுவை  ஊதியம் வழங்கப்படும் என எழுத்துப்பூர் வமாக பிடிஓ உறுதியளித்தார். போராட் டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் சசி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.