districts

img

சட்டவிரோத மது விற்பனை - குமாரபாளையத்தில் சாலை மறியல்

பள்ளிபாளையம், ஜூன் 8- குமாரபாளையத்தில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மது விற்பனையை தடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்  ஒருவர் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனையறிந்து சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்களும் போட்டிக்கு  மறியலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் சுமார்  11 அரசு மதுபான கடைகள் உள்ளன. இந்த மதுபான கடை களுக்கு அருகிலேயே அரசு அனுமதி பெற்ற பார்களும் செயல் பட்டு வருகின்றன. இந்நிலையில், புதனன்று குமாரபாளையம் - பள்ளிபாளையம் சாலையில் உள்ள அரசு மதுபான கடை பார்  அருகே, சிலர் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்ப னையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை கண்ட அப் பகுதியை சேர்ந்த பொதுநல ஆர்வலர் கனகராஜ் என்பவர் காவல்துறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். இதனையறிந்த சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்கள், பொதுநல ஆர்வலர் கனகராஜை மிரட்டும்  விதமாக பேசி உள்ளனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட  கனகராஜ் குமாரபாளையம்-பள்ளிபாளையம் பிரிவு சாலை யில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடு படும் இருவர், கனகராஜ் அருகிலேயே சாலையில் துண்டை  விரித்து படுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இத்தகவல் அறிந்த குமாரபாளையம் காவல் ஆய்வாளர்  தவமணி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரையும்  குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றார்.