districts

img

சாலை விழிப்புணர்வு பொம்மலாட்டம்

நாமக்கல், பிப்.14- குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொம்ம லாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சாலை போக்குவரத்து விதிகளை மதிப்போம் என்பதை வலியுறுத்தி, பொம்மலாட்டம் நிகழ்ச்சி குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார போக்கு வரத்து அலுவலர் பூங்குழலி மற்றும்  மோட்டார் வாகன ஆய் வாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மாணவர்களுக்கு பொம்மலாட்ட கதைகளை சுமார் ஒன்றரை  மணி நேரம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவர்களின் பாவனை நடிப்பு மற்றும் நாடகம் நடைபெற்றது. இவற்றை மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கண்டுகளித்த னர். இறுதியில் மாணவர்களிடையே கேள்விகள் கேட்கப் பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் ஓட்டு நர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், இருபால் ஆசிரியர் கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.