நாமக்கல், ஜன.23- பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடு பட்டனர். அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையின் சிறப்பு பட்டாலியன் குழுவில் இடம் பெற்றுள்ள 25 வீரர்கள் பள்ளிபாளையம் வந்தனர். காவிரி ஆற்றங் கரையில் பேரிடர் மீட்பு குழு தலைவர் கணேஷ்பிரசாத் தலைமையிலான வீரர்கள் மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் செய்யப்படும் மீட்புப் பணிகள், பாதிக்கப்படுவோர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்து செயல்முறை விளக்கமளித்தனர். காவிரி ஆற்றில் ரப்பர் படகு களை பயன்படுத்தி சாகசங்களை நிகழ்த்தி காட்டி னர். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் இள வரசி, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சீனி வாசன், இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் வரு வாய்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.