சேலம், ஜன.8- ஆத்தூர் அருகே பள்ளி மாணவர்கள், ஆபத்தான முறையில் பேருந்தில் பய ணம் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஆத் தூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் என பத்துக்கும் மேற் பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு கொத்தாம்பாடி, அழகா புரம், ராம நாயக்கன் பாளையம், செல்லி யம்பாளையம், நரசிங்கபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்ட்ட பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில், திங்க ளன்று காலை வாழப்பாடியில் இருந்து ஆத் தூரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள், ஆபத்தை உணராமல் படி யில் தொங்கியபடி பயணம் செய்தனர். இந்த ஆபத்தான பயணத்தால் ஏதேனும் உயிரி ழப்பு ஏற்படும் முன்னரே, உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.