கோவை, ஏப்.19- இடதுசாரி கட்சிகளின் உறுப்பி னர்கள் நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்த காரணத்தினால்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற முக்கிய திட்டங்களை நாடாளுமன் றத்தில் சட்டமாக இயற்றப்பட்டது என இளைஞர்கள் மாதிரி நாடாளு மன்ற கூட்டத்தில் பி.ஆர்.நடராஜன் எம்பி., உரையாற்றினார். கோவை - சரவணம்பட்டியில் உள்ள சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில், வணிக வியல் துறையின் சார்பில் செவ்வா யன்று இளைஞர்கள் மாதிரி நாடாளுமன்றம் நிகழ்வு நடை பெற்றது. சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி முதல்வர் முனைவர் வி.ராதிகா வர வேற்றார். கல்லூரியின் இணை செயலர் நித்யா ராமச்சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் பேராசிரியர் பெர்னார்ட் எட்வர்ட் வாழ்த்துரை வழங்கினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக, நாடாளுமன்ற கூட் டத்தின் செயல்பாடுகள், விவா தங்கள் குறித்தும், நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்த மாண வர்கள் எழுப்பிய சந்தேகங் களுக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி., விளக்கம் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், நமது நாட்டின் மிகப் பெரிய ஜனநாயகம் மாண்புகளை பாதுகாக்கும் ஒரே அவை நாடாளு மன்றமாகும். இந்த அவையினு டைய நடைமுறைகளை சட்டத் திற்கு உட்பட்டு 1952 ஆம் ஆண்டு சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கி கொடுத்த சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு இந்த ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றம் செயல்படுகிறது. பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி யின் உறுப்பினர்கள் நாங்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் வலியுறுத்தி வரு கிறோம். இதுவரையில் அது நிறை வேற்றப்படவில்லை. மாறாக, மாநில அரசுகள் உள்ளாட்சிகளில் அந்த இட ஒதுக்கீட்டை நிறைவேற் றுகிறது, அது ஒருவகையில் வர வேற்பதாக இருந்தாலும், இங்கு சட்டத்தை திருத்துகிற, சட்டத்தை உருவாக்குகிற, உரிமை என்பது கிடையாது, அப்படியான பலம் பொருந்திய அமைப்பு முறையில் இயங்குவது தான் நாடாளுமன்றம்.
இவ்வாறு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகிற சிறப்பு சட்டங்கள் ஏதேனும் மக்கள் நலன் குறித்த மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் நலன் விரோத நடவடிக் கைகளில் இருக்குமாயின், அதில் தலையிட்டு கேள்வி எழுப்புகிற உரிமை உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. ஒரு அரசு அமைப்பதற்கு தனி பெரும்பான் மையோ அல்லது கூட்டாட்சி முறை யிலான சில கட்சிகளினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு நாடாளுமன்றம் ஆட்சி அமைக்கப்படும். அந்த வகையில், கடந்த 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில், 64 உறுப்பினர்களை கொண்டு இடதுசாரி கட்சிகள் வலுவோடு இருந்தது. அப்போது, மார்க் சிஸ்ட் கட்சியின் ஆதரவோடு ஐக்கிய முன்னணி அரசு அமைக் கப்பட்டது. டாக்டர் மன்மோகன் சிங் பிரதமாராக இருந்தார். அந்த ஆட்சி காலத்தில் மக்களுக்கு தேவையான மகத்தான சட்டங் களை நிறைவேற்றினோம். அதிலும், மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்பந்தத்தின் காரணமாகவே இரண்டு முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. மகாத்மா காந்தி வேலை உறுதி சட்டம், இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங் களில் வாழுகின்ற ஏழை மக்களி னுடைய வறுமையை போக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இத்திட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோல மாணவ, மாணவிகள் கல்வி பயில கல்வி கடன் உறுதிச் சட்டத்தை அக்காலகட்டத்தில் தான் உருவாக்கினோம். இச் சட்டத்தினால் ஏழை, எளிய மாண வர்கள் கல்வி கடனை பெற்று வாழ்க்கையின் அடுத்த கட்டத் திற்கு முன்னேற வழிவகுத் துள்ளது. கடந்தாண்டு மட்டும் 120 கோடி ரூபாய் வரை மாணவர் களுக்கு கல்விக்கடன் வழங்கப் பட்டதை உறுதி செய்யப்பட் டுள்ளது.
அதே காலத்தில்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசியல், அரசு சார்ந்த நடவடிக்கைகளை சட்டத்தின் அடிப்படையில முழு விவரங் களையும் கேட்டறிந்து கொள்ளு கிற உரிமையை இந்த சட்டம் சாதாரண மக்களுக்கு வழங்கி யுள்ளது. இந்த சட்டம் பல அரசுத் துறை ரீதியான நடவடிக்கைகளை சீர் செய்துள்ளது. அரசு மற்றும் அரசியல் துறைகளில் நடை பெறும் பல ஊழல்கள் இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. சாமானிய மக்களும் தங்களுக்கு எழும் சந்தேகங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரிந்து கொள்ள பெரும் வாய்ப்பை இச்சட்டம் ஏற்படுத்தி யுள்ளது என்றால் அது மிகையல்ல என்றார். இதனைத்தொடர்ந்து, தமிழ் நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் மனித உரிமை அமைப்பு (கட்சி) உறுப்பினர், வழக் கறிஞர் ஆர்.ஜெகதீஸ்வரன் பங் கேற்று, பல்வேறு சட்டங்கள் குறித்தும் குற்றங்களுக்கான தண்ட னைகள் குறித்தும் மாணவர் களுக்கு விளக்கினார். முடிவில், வணிகவியல் துறைத் தலைவர் ஜே.ஷீபா நன்றி கூறினார்.