districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நிரந்தர பணிகளை அழித்திடும் அரசாணையை திரும்பபெறுக

தருமபுரி, ஆக.12- அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், நிரந்தர பணிகளை அழித் திடும் அரசாணையை திரும்பபெற வேண்டும் என அரசு ஊழியர் சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டபேரவை கூட்டம்  நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வட்ட தலைவர் என்.யாரப்பாஷா தலைமை ஏற்றார். சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர்பி.சங்கர் துவக்கி வைத்தார்.  வட்டசெயலாளர் ஆர்.முருகன், பொருளாளர் எம்.வசந்த குமார் ஆகியோர் அறிக்கையை முன்மொழிந்தனர். மாவட்டச்  செயலாளர் ஏ.சேகர் சிறப்புரையாற்றினார்.  புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூ தியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கோ. பழனியம்மாள் உரையாற்றினார்.

ரோபோவை கண்டுபிடித்த 5 ஆம் வகுப்பு மாணவன் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு

தருமபுரி, ஆக.12- ரோபோவை கண்டுபிடித்த 5-ம் வகுப்பு மாணவனுக்கு  டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு தெரிவித்தார்.  தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில், விஞ்ஞானி டாக்டர்.மயில்சாமி அண்ணா துரை கலந்து கொண்டு அப்துல் கலாம் திருவுருவ சிலை  மற்றும் ராக்கெட் மாதிரியை திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசுகையில், அறிவியலில் உலகமே நிலவில் தண்ணீர் இல்லை என தோல்வி அடைந்த போது இந்தியா  மட்டும் தான் சந்திராயன் விண்கலம் மூலம் தண்ணீர் உள்ளது  என நிருபித்தது. இதன் மூலம் உலக நாடுகளுக்கு  விண்வெளி  அறிவியலில் இந்தியா முன்னோடியாக இருப்பது உறுதி யாகியது. அப்துல் கலாம் கனவை மாணவர்கள் மற்றும்  இளம் தலைமுறையினர் நனவாக்கி வருவது இப்பள்ளியில் நடக்கும் நிழ்ச்சிகளின் மூலம் உறுதியாகி உள்ளது. தொடர்ந்து  விண்வெளி மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது என்றார். முன்னதாக,  அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து  வரும் ஈரோட்டை சேர்ந்த மாணவன் ரோபோவை கண்டு பிடித்து இயக்கியதை பார்த்து மயில்சாமி பாராட்டு தெரிவித் தார். இந்நிகழ்ச்சியில்  மாவட்ட கல்வி அலுவலர் இளங்கோ,  பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா மற்றும் ஆசிரியர்கள், மாண வர்கள் பெற்றோர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

ஊரக வளர்ச்சி துறையினர் போராட்ட அறிவிப்பு எதிரொலி 

நிர்வாகத்தில் கணவர் தலையீடு இருக்காது என உறுதி

சேலம், ஆக.12- அரசு நிர்வாகத்தில் கணவரின் தலையீடு இருக்காது என ஒன்றியக்குழுத் தலைவர் உத்தரவாதம் அளித்தால் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க போராட்டம் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம்,  காடையாம்பட்டி, ஊராட்சி ஒன்றியக்  குழுத் தலைவர் மாரியம்மாளின் கணவர் ரவி மற்றும் அவரது  குடும்பத்தினர், ஊழியர்களிடம் அத்துமீறல் மற்றும் அராஜக  போக்கை கண்டித்து  அனைத்து வட்டார கிளைகளில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடத்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர்.  இதையறிந்த உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தமிழரசி,  உதவி இயக்குநர் (தணிக்கை) ராமஜெயம் ஆகியோர் முன்னி லையில், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், தனது குடும்பத்தாரின் செய லுக்கு வருந்துவதாகவும், இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடக்காது என தெரிவித்தார். மேலும், பிரச்சனையை சுமூகமாக முடித்து கொள்ள அனைத்து ஒத்து ழைப்பையும் அளிப்பதாக ஒன்றியத் தலைவர் தெரிவித் தார். மேலும் மாவட்ட நிர்வாகம் உரிய வழிகாட்டுதலை பின் பற்ற அனைத்து உள்ளாட்சி பிரநிதிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்தனர். காடையாம்பட்டி ஒன்றிய குழுத் தலைவரின்  உத்தரவாதத்தையும், மாவட்ட நிர்வாகத்தின் உறுதி மொழி யையும் ஏற்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக ஊரக வளர்ச்சித் துறை அலுவ லர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 

இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு  இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி

கோவை, ஆக.12- இந்திய கிரிக்கெட் அணியில் இளைஞர் களுக்கு வாய்ப்பு குறித்து இந்திய கிரிக்கெட்  அணியின் வீரர் நடராஜன் கோவையில் பேட்டி  அளித்தார். கோவை, ஆர்எஸ்புரம் பகுதியில் புதிய உணவு கடையை இந்திய கிரிக்கெட் வீரரும் இடது கை வேகப்பந்து வீச்சாளருமான நட ராஜன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நட ராஜன்,  ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு  காயம் காரணமாக விளையாட முடிய வில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறேன். சையத் முஷ்டாக் அலி டிராபி  கோப்பைக் காண போட்டி நடைபெற உள்ள தாகவும்,இதில் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பை போட்டியில் இடம் கிடைக் கலாம் அல்லது கிடைக்காமலும் போக லாம். விளையாடுவதை சிறப்பாக விளை யாடலாம். தற்போது உள்ள இளைஞர்கள் நல்லவிதமாக விளையாடுகிறார்கள். இந்திய அணியில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது நல்ல விஷயம். தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டெஸ்ட் மற்றும் ஒரு  நாள் டி”20 தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்றார். 

கிராமங்களில் பாரத் நெட் இணையதள வசதி செப்டம்பரில் இணைப்பு வழங்க உத்தேசம்

திருப்பூர், ஆக.12 – திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் இணை யதள வசதி வழங்க பாரத் நெட் திட்டம் முழு வீச்சில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் முதல் இணையதள இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள் ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளி லும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டம், தமிழ் நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (டான்பி நெட்) மூலம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் இணையதள இணைப்பு வழங்கும் பணி வரும் செப்டம்பர் மாதம் முதல் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடிஇழை இணைப்பு 85 % மின்கம்பங்கள்  மூலமும், 15 % தரைவழியாகவும் இணைத்திட நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான உபகர ணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம  ஊராட்சி சேவை மையக் கட்டிடம் அல்லது அரசு கட்டிடத் தில் நிறுவப்பட்டு வருகிறது.  இத்திட்டத்திற்கான உபகர ணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின்வசதி உள் ளதை உறுதி செய்யவும், பிஓபி பொருத்தப்பட்டுள்ள அறை யில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப் பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, அரசாணைப் படி, அந்த கிராமஊராட்சி செயலாளர் பொறுப்பாக்கப்பட்டு உள்ளார். இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் அனைவரும் இணையதள வசதி பெற முடியும். இத்திட்ட மின்கலம்,  கண்ணாடி இழை உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் அர சின் உடமைகள் ஆகும். இந்த உபகரணங்களை சேதப்படுத் தும் அல்லது திருடும் நபர்கள் மீது காவல்துறை மூலம் கடும்  குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட  ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்து உள்ளார்.

சிறப்பு மக்கள் நீதிமன்றம்: வழக்குகளுக்கு தீர்வு

திருப்பூர், ஆக.12 - திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்க ளில் சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வுகள் சனியன்று நடை பெற்றன. இதில் பல்வேறு வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப்பட்டது. மொத்தம் ஏழு அமர்வுகளாக இந்த மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளா கத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய நீதிபதி  ஸ்ரீகுமார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 2387 வழக்கு கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 766 வழக்குக ளுக்குத் தீர்வு காணப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.28  கோடியே 51 லட்சத்து 60 ஆயிரத்து 936 ஆகும். இவற்றில் மோட் டார் வாகன விபத்து வழக்குகள் 248. இவற்றின் மொத்த மதிப்பு  ரூ.20.89 லட்சம் ஆகும். சிவில் வழக்குகள் 68. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 கோடியே 79 லட்சத்து 39 ஆயிரத்து 141  ஆகும். குடும்ப நல வழக்கு ஏழு. அவற்றின் மொத்த மதிப்பு  ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். சமரசத்திற்குரிய குற்ற வழக்குகள் 415. அவற்றின் மொத்த  மதிப்பு ரூ.16 லட்சத்து 39 ஆயிரத்து 700 ஆகும். காசோலை  மோசடி வழக்குகள் 13. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 லட் சத்து 95 ஆயிரம். வங்கி வாராக்கடன் வழக்குகள் 15. அவற்றின்  மொத்த மதிப்பு ரூ.5 லட்சத்து 5 ஆயிரத்து 574 ஆகும். இந்நிகழ்வில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்  புகழேந்தி, கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் கார்த்திகேயன்,  நீதித்துறை நடுவர் முருகேசன், வழக்கறிஞர்கள் பழனிச்சாமி,  ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெண்ணை தாக்கி மிரட்டல்:  பாதுகாப்பு வழங்க கோரிக்கை

திருப்பூர், ஆக. 12 - திருப்பூர் தாராபுரம் தாலுக்கா கொக்கம்பாளையம் வலை யாம்புதூரில் வசித்து வருபவர் முத்துச்சாமி, இவரது மனைவி  நாகமணி (வயது 52). இவர்களுக்கு சரவணன், சண்முகம், சசிக்குமார் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில் இரண் டாவது மகன் சண்முகமும், அவரது மனைவி பிரியதர்ஷினி யும் அதே பகுதியில் இவர்களது வீட்டுக்கு அருகாமையில்  வசித்து வருகின்றனர். இவர்களின் வீட்டுக்கு அருகில் வசித் துவரும் முருகன் என்பவரின் மனைவி ஜோதிமணிக்கும், நாக மணிக்கும், தடத்தில் சென்று வருவது சம்பந்தமாக சண்டை  வந்துள்ளது. இந்நிலையில் நாகமணியின் மூன்றாவது மகன்  கடந்த 6ஆம் தேதி கறி வாங்கிக் கொண்டு வண்டியில் வந்தவர்,  அவரது வண்டியை தற்செயலாக ஜோதிமணி வீட்டு வாசல்  அருகே நிறுத்தி இருக்கிறார். அப்போது ஜோதிமணியும், அவ ரது மகள் காந்திமதியும் சசிகுமாரை தகாத வார்த்தைகளால்  திட்டியுள்ளனர். அதற்கடுத்த நாள் 7ஆம் தேதி மதியம் நாகம ணியும், அவரது மருமகள் பிரியதர்ஷினியும் தங்கள் வீட்டுத்  திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.  அப்போது  அங்குவந்த ஜோதிமணியும், மகள் காந்திமதியும் சேர்ந்து நாக மணியை தகாத வார்த்தை பேசி திட்டியதுடன் அருகில் இருந்த  தென்னை மட்டையை எடுத்து அடித்து கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.  இந்த தாக்குதலில் நாகமணிக்கு இடது கை மணிக்கட்டில்  எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தாராபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல்சிகிச்சைக் காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்துள்ளனர். இது குறித்து குண்டடம் காவல் நிலையத்தில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகமணி யின் மகன் சரவணன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள் ளியன்று ஆதித்தமிழர் சனநாயகப் பேரவை நிறுவனர் அ.சு. பவுத்தனுடன் சென்று மனுக் கொடுத்திருக்கிறார். இதில் தனது  தாயாரைத் தாக்கி எலும்பு முறிவு ஏற்படுத்திய ஜோதிமணி,  காந்திமதி ஆகியோர் மீது கடும் சட்டப் பிரிவுகளில் நடவ டிக்கை எடுக்க வேண்டும், தங்கள் குடும்பத்துக்கு உரிய பாது காப்பு வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

கஞ்சா விற்ற  இளைஞர் கைது

அவிநாசி, ஆக.12- அவிநாசி அருகே கஞ்சா விற்பனை செய்த  இளைஞரை  போலீசார் கைது செய்தனர். அவிநாசி போலீசார் ஈரோடு சாலையில் வியாழனன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில்  சந்தேகத் துக்கு இடமாக கைப்பையுடன் நின்றிருந்த இளைஞரை போலீ சார் விசாரித்ததில். இவர் அவிநாசி அருகே பழங்கரை தேவம் பாளையம் பழனிசாமி காம்பவுண்ட் பகுதியில் வசித்து வந்த  பீகாரைச் சேர்ந்த அசரப்(21) என்பதும், கைப்பையில் விற்ப னைக்காக கஞ்சா வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து அச ராப்பை கைது செய்தனர். இவரிடம் இருந்த  கஞ்சா பறிமுதல்  செய்யப்பட்டது.

ரூ.1.96 கோடிக்கு பருத்தி ஏலம்

தாராபுரம், ஆக.12- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.96 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட முதுநிலை செயலாளர் சுரேஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங்குமுறை விற் பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடை பெற்றது. இதில் திருப்பூர், கருர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு,  கோவை மாவட்டங்களை சேர்ந்த 739 விவசாயிகள் பருத் தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அதேபோல்  பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள்  மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7 ஆயிரத்து 842க்கும் குறைந்த பட்ச விலையாக ரூ. 6 ஆயிரத்து 650க்கும் சராசரி விலையாக  ரூ. 7 ஆயிரத்து 350க்கும் விலை போனது. மொத்தம் 8747 மூட் டைகள் 2 ஆயிரத்து 701 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடியே  96 லட்சத்து 96 ஆயிரத்து 97 க்கு விற்பனையானது.

திருப்பூர் மாவட்ட ஐடிஐ-களில் காலி இடங்களில் சேர அழைப்பு

திருப்பூர், ஆக.12 - திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், தாராபுரம் மற்றும்  உடுமலைப்பேட்டையில் இயங்கி வரும் அரசினர் தொழிற்ப யிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயிற்சியில் சேருவதற்கு, கடந்த மே 24ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த ஐடிஐ-களில் அமைக்கப்பட்டுள்ள “சேர்க்கை உதவி மையத்தில்”, குறிப்பிட்ட சில தொழிற்பிரி வுகளில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை நடை பெற்று வருவதால், விருப்பமுள்ள மாணவ, மாணவிகள்  நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு  0421-2429201, 04258-230307 மற்றும் 04252-22334 ஆகிய தொலை பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

தென்னம்பாளையம் சந்தையில் முள்ளங்கி விலை சரிவு

திருப்பூர், ஆக.12 - திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் முள்ளங்கி விலை சரிவடைந்துள்ளது. ஏற்கெனவே உச்சத்தில் இருந்த தக்காளி, வெங்காயம் விலை ஓரளவு குறைந்துள்ளது.   தமிழகம் முழுவதும் கடந்த வாரம் வரை தக்காளி மற்றும்  வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்தது. அதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்தது. தற்போது தக் காளி, வெங்காயம் ஆகியவற்றின் விலை சற்றுக் குறைந்திருக் கிறது. தக்காளி கிலோ ரூ.50க்கும், பெல்லாரி வெங்காயம் கிலோ ரூ.20 – ரூ.25 என்ற அளவிலும் சில்லறை விலையில்  விற்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக மற்ற காய்கறிக ளின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.  திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில்  செயல்பட்டு வரும் தினசரி சந்தைக்கு திருப்பூர் மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வருகின்றனர். தற்போது பல்வேறு பகுதிகளில் முள் ளங்கி விளைச்சல் அதிகமாக இருப்பதன் காரணமாக முள் ளங்கி அதிகஅளவு கொண்டு வரப்பட்டிருந்தது. கடந்த வாரம்  30 கிலோ எடை கொண்ட முள்ளங்கி மூட்டை ரூ.1000 வரை  விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ரூ.400 க்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் கூறினர். விலை குறைந்தாலும் அதையும் வாங்குவதற்கு வியாபாரி கள் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்

நீர்நிலைகளில் கழிவுநீரை கலந்தால் கடும் நடவடிக்கை

நாமக்கல், ஆக.12- ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கழிவுநீரை கலந் தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செப்டிக் டேங்க்  சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய  நகராட்சிகளில், கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டுநர்கள், பணியாளர்களுக்கான பயிற்சி முகாம், நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு நகர்மன்றத் தலைவர் கலாநிதி தலைமை வகித்தார்.  பொறியாளர் சண்முகம் முன்னிலை வகித்து பேசினார். இதில் நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் பேசுகை யில், பணியாளர்கள் செப்டிக் டேங்கில் இறங்கி சுத்தம்  செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து  பணியாளர்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பணியாளார்கள் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதை உறுதி  செய்ய வேண்டும். செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனம்,  நன்றாக வேலை செய்யக்கூடிய நிலையில் பராமரிக்க வேண்டும். கழிவுநீரை சேகரிக்கும் இடத்திலும், ஏற்றி சொல்லும் போதும், அப்புறப்படுத்தும் போதும், சிறிதளவு  கசிவு இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து எடுத்து செல்லப்படும் கழிவுநீரை ஆறுகள், குளம், கழிவுநீர் வடிகால்கள், திறந்த வெளி இடங்கள், பாதாள சாக்கடை தொட்டிகள் ஆகியவற்றில் கொட்டக்கூடாது. மீறி  செயல்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். கழிவுகள் மற்றும் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். பணியாளர்கள் பாதாள சாக்கடை  அடைப்பு தொட்டிக்கு உள்ளே நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பணியா ளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உரிமம் பெறாத வாகனங்கள் நகராட்சி  பகுதிகளில் இயங்கினால் அவை பறிமுதல் செய்யப் படும். இதுபற்றி பொதுமக்கள் நகராட்சிக்கு தகவல் தெரி விக்கலாம், என்றார்.

கஞ்சா விற்றவர் கைது

கோவை, ஆக.12-  கோவை பகுதியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது  செய்துள்ளனர். கோவை, ராமநாதபுரம் பகுதியில் வெள்ளியன்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுங்கம்  பார்க் அருகே நின்றிருந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில்,  பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்கு பின்  முரணாக பதில் அளித்தார். இதையடுத்து, போலீசார் அவரிடம் சோதனை செய்த போது கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போதைப்பொருள் விற்ப னையில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலி  ஒசாமா (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம்  இருந்து 120 கிராம் கஞ்சா மற்றும் 3.78 கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப் பட்ட அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத் தனர். இதேபோல், குனியமுத்தூர் குறிச்சி குளக்கரை அருகே மூன்றுபேரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை யடுத்து, பாலசுப்பிரமணி (28), ஜாபர் சாதிக் (29), சதாம்  உசேன் (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம்  இருந்து 83 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப் பட்டது. பின்னர் 3 பேரையும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறை யில் அடைத்தனர்.

சாலை விபத்துகளை தடுக்க  38 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல், ஆக.12- நாமக்கல் மாவட்டத்தில், சாலை விபத்துகளை தடுக்க  38 இடங்களில் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு  செய்து, நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துக் களை குறைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் காவல் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதன்படி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து அங்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து அதி காரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் 38 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதி காரிகள் மற்றும் அலுவலர்கள் கடந்த ஒரு வாரமாக கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 38  இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த  ஆய்வுக்கு 2.0 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறு கையில், பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு  நேரங்களில் விபத்துகள் அதிகம் நடப்பது தெரியவந்துள் ளது. இதற்கு அந்த இடங்களில் போதுமான வெளிச்சம் இல்லாமல் இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக் கையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,  மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுக்க எடுக்க  வேண்டிய நடவடிக்கை குறித்து போக்குவரத்து ஆணை யரின் உத்தரவை பெற்று சாலை பாதுகாப்பு மேம்படுத்தப் படும், என்றனர். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் கடந்தாண்டு தேசிய நெடுஞ்சாலைகளை விட மாநில நெடுஞ்சாலைகளில் தான்  விபத்துகள் அதிகம் நடந்துள்ளது. எனவே, மாநில நெடுஞ் சாலைகளில் விபத்துக்கான காரணம் குறித்து இந்த குழு வினர் ஆய்வு செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தை  பொறுத்தவரை அனைத்து பகுதியிலும் சாலைகள் விரி வாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான இரண்டு  வழிச்சாலைகள் கூட 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட் டுள்ளது. அந்த இடங்களில் வாகன ஓட்டுநர்கள் அதிவேக மாகவும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதும் விபத்துக்கு  காரணமாக அமைகிறது. இதனால் இதை தடுக்கும் வகை யில், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரவு நேரங் களில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வரு கின்றனர், என்றனர்.

புத்தக திருவிழாவில் திரை இசை இலக்கியம்

ஈரோடு, ஆக.12- ஈரோடு புத்தக திருவிழாவில், திரை இசை  இலக்கிய சிந்தனை அமர்வு நடைபெற்றது.  ஈரோட்டில், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி  வளாகத்தில் புத்தக திருவிழா  நடைபெற்று வருகிறது. ஆக.15 வரை நடைபெறும் இத்திரு விழாவில், நாள்தோறும் மாலை சிந்தனை அமர்வுகள் நடைபெற்று வருகிறது.  வியாழனன்று மாலை இசைக்கவி ரமணன் வாழ்வோடு கலந்த திரைப்பாடல் கள் குறித்து பேசப்பட்டது. முன்னதாக வார  இதழின் ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திர லிங்கம் (கனடா) தன்னைச் செதுக்கிய படைப்புகள் குறித்து பேசினார். வெள்ளி யன்று, இன்னிசையோடு ஓர் இலக்கிய உரை  அரங்கேறியது. மலேசிய நாட்டின் வழக்க றிஞரும், சொற்பொழிவாளருமான சி. பாண்டித்துரை  திரைப்பாடல் தரும் பாடம்  என்ற தலைப்பில் தனது குழுவினருடன் இணைந்து உரை நிகழ்த்தினார். இரண்டு நாட்களும் திரைப்படங்களைத் தழுவியே சிந்தனை அரங்க நிகழ்வுகள் இடம்  பெற்றன. சனியன்றும் திரை பிரபலங்களின் உரையாற்றினர்.