districts

img

கோவையில் மாட்டுக்கறி திருவிழா

கோவை, மே 22- கரப்பான் பூச்சி அமைப்பின் சார் பில் கோவையில் மாட்டுக்கறி திரு விழா நடைபெற்றது.   ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணிக்கு அனுமதி மறுத்து பிரியாணி திருவிழாவை ரத்து செய்ததை கண்டித்து கோவையில் மாட்டுக்கறி பிரியாணி விருந்து வழங் கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏரா ளமானோர் பங்கேற்றனர்.  கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலு வலகத்தில் நடைபெற்ற மாட்டுக்கறி பிரியாணி விருந்தில் மாட்டுக்கறி பிரி யாணி, மாட்டுக்கறி சுக்கா மற்றும் கைமா வடையுடன் விருந்து பரிமாறப் பட்டது. இதில் சிறியவர்கள் முதல் பெரி யவர்கள் வரை பங்கேற்றனர். பெரி யார் திராவிடர் கழகத்தின் பொதுச்  செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த  விருந்து நிகழ்ச்சியில் திராவிடர் விடு தலைக் கழகம், விடுதலை சிறுத்தை கள் கட்சி மற்றும் பெரியாரிய அமைப் புகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய தந்தை பெரியார் திரா விடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், ஆம்பூர் பிரியாணி  திருவிழாவில்பீப் பிரியாணி அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும் பேரறி வாளன் விடுதலை கொண்டாடும் வித மாக இந்த விருந்து நடைபெற்று வருவ தாகவும், இந்துத்துவ அமைப்புகள் கூறியதுபோல் போன்று பன்றி கறி பிரி யாணி போட்டாலும் அதை சாப்பிடு வோம். ஏற்கனவே கடந்த சில ஆண்டுக ளுக்கு முன் பன்றி கறி பிரியாணி  விருந்து நிகழ்ச்சி நடைபெற்றதை நினைவூட்டினார்.