கோவை, ஜன.19- மக்கள் அவதியை போக்க வரும் நிதியாண்டின் பட்ஜெட் தொடரில் கோவை மாவட்டத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வருவாய் தாலுகா அலுவலகங்கள் அமைப்பதற்கான பணியை மேற்கொள்வோம் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து 34 பயனா ளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டாவும், 51 பயனாளி களுக்கு சமூக பாதுகாப்பு திட் டத்தின் கீழ் உதவித் தொகையும், 11 பயனாளிகளுக்கு உழவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு துறையின் கீழ் 111 பயனாளி களுக்கு 23லட்சத்து 19ஆயிரத்து 319 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆர்டிஓ அலுவலகங்களுக்கோ, தாலுகா அலுவலகங்களுக்கோ மக்கள் அலையாதபடி, ஆன்லைன் சேவையை அதிகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விமான நிலைய பணிகள், சிப்காட் பணிகள் நில எடுப்பு பணிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர்ஆணையிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில், நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும். ஆகவே, தொழிற்சாலைகளுக்கு நிலம் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். முதியோர் பென்சன் யாருக்கும் தடங்கல் இல்லாமல் கொடுக்க உத்தரவிட் டுள்ளோம். கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளது. 11 தாலுகா அலுவலகங்கள் தான் உள்ளன. 4 லட்சம் பேருக்கு ஒரு தாலுகா அலுவலகம் இருப்பது பணி செய்யாத சூழலை ஏற்படுத்துகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வரும் நிதி யாண்டின் பட்ஜெட் தொடரில் நம்முடைய மாவட்டத் திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வருவாய் தாலுகா அலுவலகங்கள் அமைப்பதற்கான பணியை செய்து கொடுப்போம். ஆன்லைன் பத்திரப் பதிவில் சரியாக இருந்தால் உடனே கிடைக்கும். பட்டா, வாரிசு, முதியோர்
உதவித்தொகை என எதுவாக இருந் தாலும் 15 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும். மனுக்கள் மீது உடனடி யாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். இ சேவை மையம் குறைவாக உள்ளது. அங்கு சில தவறுகள் நடப்பதாக தகவல் கள் வருகிறது. அதன் மீதும் நடவ டிக்கை எடுக்கப்படும். கேரளா அரசு தமிழகத்தில் சர்வே பண்ண வரும் பொழுது தமிழக அரசின் அனுமதி இல்லாமல் வரக்கூடாது என கேரள அரசுக்கு தெரிவித்துள்ளோம். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் கவனமாக இருக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். சிப்காட்டிற்கு, யாரையும் சிரமப் படுத்தி நிலம் எடுப்பதில்லை. கோவை மாவட்டத்தில் 25 ஆயிரத்து 150 பேருக்கு திமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 6000 பேருக்கு கொடுக்க உள்ளோம். கோவை மாவட்டத்திற்கு வலு வான ஆளாக செந்தில் பாலாஜி உள்ளார். நில எடுப்பில் பிரச்சனை கள் வரத்தான் செய்யும். முதல்வர் யாருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார். அந்த வகையில், யாரையும் சிரமத்திற்கு உள்ளாக்காமல் நிலங்களை எடுக்கி றோம் என்றார்.