திருப்பூர், மே 18 - திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில்; 1432-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமா பந்தி) மே 23ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஜமாபந்தி துவங்கும் நாளில் காலை 10 மணிக்கு சம்மந்தப் பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்வாய அலு வலரால் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்த பின்னர் உடனடியாக தீர்வு காணப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வருவாய் தீர்வாயத்தின் போது அனைத்துத்துறை அலுவலர்களும் வருகை புரிவதால் இதர துறை சம்மந்தப் பட்ட கோரிக்கைகளும் உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும். பல்லடம் வட்டத்திற்கு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மே 23 முதல் 26 வரை ஜமாபந்தி நடைபெறும். திருப்பூர் வடக்கு வட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மே 23, 24 தேதிகளில் நடைபெறும். ஊத்துக்குளி வட்டத்தில் திருப்பூர் சார் ஆட்சியர் தலைமையில் மே 23, 24 தேதிகளில் ஜமாபந்தி நடைபெறும். திருப்பூர் தெற்கு வட்டத் தில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலர் தலைமையில் மே 23 முதல் 25 வரையும், அவிநாசி வட்டத்தில் திருப்பூர் கலால் உதவி ஆணையர் தலை மையில் மே 23 முதல் 26 வரையும், தாராபுரத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மே 23 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை விடுமுறை நாட்கள், திங்கள்கிழமை நீங்கலாகவும், காங் கயம் வட்டத்தில் திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் மே 23 முதல் 26ஆம் தேதி வரையும், மடத்துக்குளம் வட்டத்தில் உடுமலை வரு வாய் கோட்டாட்சியர் தலைமையில் மே 23, 24 தேதிகளிலும், உடுமலைப்பேட்டை வட்டத்தில் திருப்பூர் சமூகப் பாது காப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையில் மே 23 முதல் 30ஆம் தேதி வரையும் ஜமாபந்தி நடைபெறும். இந்த வருவாய் தீர்வாய நிகழ்ச்சிகளை பொதுமக்கள் பயன்ப டுத்திக் கொண்டு பலன் அடையுமாறு மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் கேட்டுக் கொண்டுள்ளார்.