உடுமலை, மார்ச் 25- இயற்கை வளங்களை அழிப்ப வர்களுக்கு துணை போகும் வருவாய் மற்றும் காவல்துறை யின் நடவடிக்கையை கண்டித்து வெள்ளியன்று அமராவதி நகரில் உள்ள ஆண்டியகவுண்டனூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை வட்டம், ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சியில் சுமார் 2,920 ஏக்கர் பரப்பளவு உள்ள ஜம்புக்கல் மலைப்பகுதியில் விவ சாயிகள் பயன்படுத்தும் வகை யில் சமதள நிலத்தை 1970 ஆம் ஆண்டு சுமார் 300 குடும்பத்திற்கு 0.50 சென்ட் முதல் 2.20 ஏக்கர் வரை விவசாயம் பயன்பாட்டிற்கு நிபந்தனை பட்டா தமிழக அர சால் வழங்கபட்டது. ஆனால், இப் பகுதியில் பல ஆண்டுகள் மழை யில்லாமல் போனதால் ஜம்புக்கல் மலைப் பகுதியில் இருந்து பட்டா பெற்ற விவசாயிகள் சிறிது, சிறிதாக வெளியேறி விட்டனர். இதை பயன்படுத்தி தற்பொழுது தனியார் ஒருவர் தன்னுடைய பெயரிலும், தனது குடும்பத்தி னர் பெயரிலும் போலி ஆவணம் தயாரித்து மலைப்பகுதி முழுவ தும் ஆக்கிரப்பு செய்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைமையில் விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக, திருப்பூர் மாவட்ட நீதிபதி உத்தரவின் பெய ரில் வழக்கறிஞர்கள் குழு மலைப் பகுதியில் ஆய்வு செய்தார்கள். பின்னர் ஜம்புக்கல் மலைப்பகு தியில் ஆக்கிரமிப்பு நடத்துள்ளது தொடர்பான ஆவணங்களை விவ சாயிகள் உடுமலை கோட்டாட்சி சியரிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதி காரிகள் ஜம்புக்கல்மலை பகுதி முழுவதும் நில அளவு செய்வது என்றும் அது வரை அங்கு யாரும் மேல் நடவடிக்கை செய்யக்கூ டாது என்ற முடிவு செய்யப்பட் டது.
இந்நிலையில், இயற்கை வளங்களை அழிப்பவர்களுக்கு துணை போகும் வருவாய் மற்றும் காவல்துறையின் நடவடிக் கையை கண்டித்து வெள்ளியன்று அமராவதி நகரில் உள்ள ஆண் டியகவுண்டனூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் முன்பு விவசாயி கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயி கள் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு அதி காரிகளின் முன்னிலையில் ஏற்பட்ட ஒப்பந்தங்களை மீறும் வகையில் கடந்த சில நாட்களாக கனரக வாகனங்களை கொண்டு மீண்டும் மலையை அழிக்கும் வேலையில் முன்பு ஆக்கிரமிப்பு செய்தவர்கள் ஈடுபட்டு வருகி றார்கள். அரசு உத்தரவை மீறும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை உடு மலை வருவாய்துறை மற்றும் அமாரவதி காவல்துறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்கள். அதே நேரம், புகார் அளித்த எங்களை ஆக்கிரமிப்பாளர்கள், அடியாட் களை கொண்டு மிரட்டுகிறார்கள். ஆகவே, ஜம்புக்கல் மலை யில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். அரசு சொத்தை கொள்ளைய டித்த தனியார் ஆக்கிரமிப்பாளர்க ளுக்கு சட்டபடியான தண்டனை யும், தொடர்ந்து எங்களை மிரட்டி வருபவர்களின் மீது காவல்துறை சட்டப்படியான நடவடிக்கையும் எடுத்து எங்களின் உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டும். இவ் வாறு விவசாயிகள் தெரிவித்த னர்.