districts

img

மருத்துவ படிப்பை தமிழகத்திலேயே தொடர அனுமதிக்க வேண்டும்

தருமபுரி, மார்ச் 8- மருத்துவ படிப்பை தமிழகத்திலேயே தொடர அனும திக்க வேண்டும் என உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய தருமபுரி மாணவர் கோரிக்கை விடுத்துள்ளார். தருமபுரி மாவட்டம், எர்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வர் கௌரி சங்கர். இவர், உக்ரைனில் வினிஸ்டியா  நேஷனல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மருத்து வம் படித்து வந்தார். இதனிடையே ரஷ்யா -  உக்ரைன் இடையே போர் மூண்டதால் அங்கிருந்து வெளியேற முடியா மல் தவிப்பிற்குள்ளாகினர். இந்நிலையில், தமிழக அரசின் உதவியால்  கௌரி சங்கர் உக்ரைனிலிருந்து தில்லிக்கு வந்து அங்கிருந்து சென்னை வந்தார். இதன்பின்  சொந்த  ஊரான தருமபுரி மாவட்டம்,  எர்ரப்பட்டி வந்தடைந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  உக்ரைனில் நடைபெற்று வரும் போரின் காரணமாக கிட்டத்தட்ட 5 நாட்கள் அங்கிருந்த பதுங்கு குழியில் பதுங்கி  இருந்தோம். குறிப்பாக, கடந்த  பிப்.28 ஆம் தேதி உக்ரைன் எல்லைப் பகுதியில் சுமார் 14 மணி நேரம் கடும் குளிரில் உண்ண உணவின்றி அனைவரும் அவதிப்பட்ட நிலையில், அங்கிருந்த பல்கலைக்கழகத்தின் உதவியுடன் ருமேனியா வந்தேன். இதன்பின், இந்திய தூதரகம் மூலம் தில்லிக்கு வந்து, அங்கிருந்து தமிழக அரசின் உதவியால் சென்னைக்கு விமானத்தில் வந்தேன். தமிழகம் திரும்ப பல்வேறு உதவி களை செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தன்  சார்பாகவும், தன் குடும்பம் சார்பாகவும் நன்றியை தெரிவித் துக் கொள்கிறேன்.  மேலும், என்னைப்போல இன்னும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உக்ரைனிலிருந்து  தாயகம் திரும்ப இயலா மல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களையும் விரைவில் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . தொடர்ந்து மருத்துவ படிப்பினை தமிழகத்திலேயே தொடர  நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அவர் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.