கோவை, செப்.26- பஞ்சப்படி உயர்வு குறித்த தேர்தல் வாக்குறுதியை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண் டும் என வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலனை விரைந்து வழங்க வேண்டும். தமிழக முதல்வரின் தேர்தல் வாக் குறுதியில், போக்குவரத்து தொழி லாளர்களின் 94 மாத பஞ்சப்படி உயர்வு குறித்த தேர்தல் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே, அதனை விரைந்து நிறை வேற்ற வேண்டும். பழைய ஓய் வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுப் பெற்றோர் நல அமைப்பு சார்பில் செவ்வாயன்று தர்ணா போராட் டம் நடைபெற்றது. அதன்படி போக்குவரத்து கழக கோவை தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத் தில், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்டத் தலை வர் ஜி.பழனிச்சாமி, பொதுச்செய லாளர் பி.செல்வராஜ், பொரு ளாளர் எம்.கிருஷ்ணராஜ் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில் நீலகிரி மாவட்டச் செய லாளர் எஸ்.கே.ஆறுமுகம், ஈரோடு மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெய ராமன், தலைவர் எம்.நடராஜன் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். சேலம் இதேபோன்று அரசு போக்கு வரத்து கழக சேலம் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு, தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல சங்கத்தின் மண்டலச் செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். இதில் மண்டலத் தலைவர் பி.என்.பழனி வேலு உள்ளிட்டு 500க்கும் மேற் பட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்றனர். அப்போது, கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடில், போராட்டம் தீவிரமடையும் என சங்கத்தின் தலைவர்கள் தெரிவித்தனர்.