districts

img

மருத்துவ செலவை அரசே ஏற்க ஓய்வுபெற்ற காவலர் சங்கம் கோரிக்கை

திருப்பூர், செப்.19- திருப்பூர் மாவட்ட ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்கத்தின் 12 ஆவது ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்  செவ்வாயன்று நடைபெற்றது. ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்கத்தின் தலைவர் வி.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத் தில், அனைத்து ஓய்வு பெற்ற காவலர்களின் மருத்துவ சிகிச் சைகளுக்கு ஆகும் செலவை அரசே ஏற்க வேண்டும். ஓய்வு  பெற்ற காவலர்கள் மரணித்தால் கேரள அரசு குண்டுகள்  முழங்கி மரியாதை செய்து அடக்கம் செய்கிறது. அதேபோல்  தமிழக அரசும் மரியாதை செய்ய வேண்டும். 70 வயது  கடந்த ஓய்வு பெற்ற காவலர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூ தியத்தை அதிகரித்து வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலை வர் ஜி.சண்முகம், வட்டக் கிளை தலைவர் பி.மகுடேஸ்வரன் மற்றும் காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்  பலர் பங்கேற்றனர்.