உதகை, அக்.17- குன்னூரில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதி யிலிருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கியுள்ளது. குன்னூரில் பெய்த பலத்த மழையால், சந்திரா காலனி குடியிருப்பில் நடைபாதைக்காக 40 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் இடிந்து, யூசுப் என்பவரது வீட்டின் மீது விழுந்தது. இதனால் அவரது வீட்டின் பின்பகுதியில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த நக ராட்சி ஊழியர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட னர். மின் ஊழியர்கள் நடைபாதை ஓரத்திலிருந்த மின்கம்பங் களை மாற்று இடத்தில் அமைத்து மின் இணைப்பு வழங்கி னர். இதையடுத்து வீட்டின் சுவர் இடிந்து பாதிக்கப்பட்ட யூசுப் பிற்கு அரசு நிவாரண தொகையாக ரூ.4,100 வழங்கப்பட் டது. இதேபோல் கோத்தகிரி குமரன் காலனி பகுதியில் செவ னம்மாள் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேத மடைந்தது. தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் சபீர்கான், கிராம உதவியாளர் அறிவாகரன் மற்றும் வருவாய்த்துறை யினர், வீடு இடிந்து பாதிக்கப்பட்டவருக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையான ரூ.4,100 வழங்கினர்.