சேலம், ஜுன் 27- சேலம் உருக்காலையை தனியார்மய மாக்கக்கூடாது என சேலம் மேற்கு மாநகர வாலிபர் சங்க 12 ஆவது மாநாட்டில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மேற்கு மாநகர 12 ஆவது மாநாடு பிள்ளையார் நகர் சீனீவாசன் நினைவரங் கத்தில் மாநகர தலைவர் டி.கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. மாநகர துணைச்செயலாளர் எம்.கோபி வரவேற் புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.கற்பகம் துவக்கவுரையாற்றினார். மாந கர செயலாளர் வி.ஜெகநாதன் வேலை அறிக்கையையும், மாநகர பொருளாளர் எம்.கார்த்திக் வரவு - செலவு அறிக்கையை யும் முன் வைத்தனர். இம்மாநாட்டில் ரயில்வே, சேலம் இரும் பாலை உள்ளிட்ட பொதுத்துறைகளை தனி யாருக்கு விற்கக்கூடாது. சேலம் அரசு மருத்துவமனையை ரூ.124 கோடி மதிப் பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மேம்படுத்தப் பட்ட நிலையில், மருத்துவமனையில் மருத் துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மாநகரம் முழுவதிலும் ஏற்பட் டுள்ள சுகாதார சீர்கேடுகளை சீர்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதனைத்தொடர்ந்து வாலிபர் சங்க சேலம் மேற்கு மாநகர தலைவராக கோபி, செயலாளராக வி.ஜெகநாதன், பொருளா ளராக கே.பகத்சிங் உட்பட புதிய மாநக ரக்குழு தேர்வு செய்யப்பட்டது.