சேலம், அக்.15- காபி உற்பத்தி பொருட்களுக்கு மானியம் வழங்க வேண்டுமென கருமந்துறையில் நடைபெற்ற கல்வ ராயன் மலை காபி உற்பத்தியாளர் கள் பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கல்வராயன் மலை காபி உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் பேரவை கூட்டம் கருமந்துறை பகுதியில் நடை பெற்றது. மலைவாழ் மக்கள் சங்க மாநிலப் பொருளாளர் எ.பொன்னு சாமி பேரவைக்கு தலைமை தாங் கினார். மாவட்டக் குழு உறுப்பினர் சின்னமணி வரவேற்புரையாற் றினார். விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.கிருஷ்ண பிரசாத் துவக்கி வைத்து உரையாற் றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ. ராமமூர்த்தி, மாவட்டத் தலைவர் எ. அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வாங்கினர். இதில், காபி விவசாயத்திற்கு கூடுதல் விலை மற்றும் இடுபொருட் கள் உட்பட அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் மானியத்தில் வழங்க வேண்டும், காபி வாரிய அலு வலகத்தை கருமந்துறை பகுதியில் அமைக்க வேண்டும். காபி விவசாயி களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி டிசம்பர் 3ஆம் தேதி யன்று கருமந்துறையில் பெருந் திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரவையை நிறைவு செய்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன் உரையாற்றினார். பேரவையில் காபி உற்பத்தி யாளர் சங்கத்தின் தலைவராக ஏ. பழனி, செயலாளராக தர்மலிங்கம், பொருளாளராக பெருமாள், துணை தலைவராக கட்டையன், துணை செயலாளராக அண்ணாமலை உள் ளிட்ட 16 பேர் கொண்ட காபி உற்பத்தி யாளர்கள் குழு தேர்ந்தெடுக்கப் பட்டது.