districts

img

நீதிமன்ற உத்தரவுப்படி சம்பளம் வழங்க ஒன்றியக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கவுன்சிலர் கோரிக்கை

அவிநாசி, நவ.8 – அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில்  உள்ள ஊராட்சிகளில் வேலை செய்யும்  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (டேங்க்) ஆபரேட்டர்களுக்கும், தூய் மைப் பணியாளர்களுக்கும் நீதிமன் றம் உத்தரவிட்டுள்ள ஊதியத்தை வழங்க ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியக் கவுன்சிலர் பி.முத்து சாமி வலியுறுத்தினார். அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் ஒன்றிய சேர்மன் ஜெகதீசன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவ லர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்  விஜயகுமார் ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் 15 மன்றப் பொருட் கள் வாசிக்கப்பட்டது. இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி பேசு கையில், சிஐடியு தொழிற்சங்கம் மூலம் நீதிமன்றம் சென்று  உள்ளாட்சியில் பணிபுரியும் டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள சம்ப ளத்தை உள்ளாட்சிகளில் வழங்க இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். அதேபோல தெக்கலூர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையின் கழி வுநீர், மங்கலம் சாலையில் உள்ள உண வக விடுதியில் இருந்து வரும் கழிவுநீர் வெளியேறுவால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது உடனடியாக இதனை சீரமைக்க வேண்டும் என்றும்  தெரிவித்தார். இதைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த சேது மாதவன், தேவம்பாளை யம் பகுதியில் மயான சுற்றுச்சுவர் கட் டித்தர வேண்டும், தந்தை பெரியார் நகர்  பெரியாயிபாளையம், விஜயலட்சுமி வீடு முதல் ஆறுமுகம் வீடு வரை கான் கிரீட் சாலை அமைத்து தர வேண்டும், டீச் சர்ஸ் காலனி குளத்துப்பாளையம், காங் கிரிட் சாலை அமைத்து தர வேண்டும் என்றார். திமுகவைச் சேர்ந்த கார்த்திகேயன் பேசுகையில், பழங்கரை ராஜா நகர் அரசு  ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கு மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி  அமைத்து தர வேண்டும். அதேபோல  பள்ளி வளா கத்திற்கு முன்பு பேருந்து நிழல் குடை  அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,  பாரபட்சமின்றி குடும்ப அட்டைதாரர்க ளுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் ஒரு நபர் கார்டுதாரர்களுக்கு பொருள் பெறுவதில் சிரமப்படுகின்றனர். அவர் களுக்கு பொருட்கள் கிடைக்க உரிய ஏற் பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்  கொண்டார்.