திருப்பூர், நவ.8- திருப்பூர் மாவட்டம் காங்க யம் ஒன்றியத்தில் உள்ள அர சுப் பள்ளிகளில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 4 மாதமாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி ஒன்றியக்குழு கூட்ட தில் தீா்மானம் நிறைவேற்றப் பட்டது. காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட் டம் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்கு மார் தலைமையில் செவ்வாயன்று நடை பெற்றது. துணைத் தலைவர் ஜீவிதா ஜவகர் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் கூறியதாவது, காங்கயம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 57 அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் சுகாதாரப் பணியாளர்க ளுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம் பர் மாதம் வரை நிலுவையில் உள்ள ஊதியம் ரூ.3.73 லட்சத்தை கிராம கல்விக்குழு கணக்கு மூலம் வழங்க வேண்டும். மேலும், ஆட்சிய ரின் உத்தரவுப்படி அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சுகாதாரப் பணியாளர் களுக்கான ஊதியத்தை ஒன்றியப் பொது நிதி யிலிருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பது உட்பட 31 தீா்மானங்கள் ஒருமன தாக நிறைவேற்றப்பட்டன என்றார். இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் விமலாதேவி, ஹரிஹரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.