districts

img

தாட்கோ மூலம் மானியத்துடன் கடனுதவி வழங்கிடுக

சேலம், டிச.27- மலைக்குறவன் இன மக்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கடன் வழங்க வேண் டும் என சேலம் மாவட்ட மலைக்குறவன் (பழங்குடியினர்) கல்வி மற்றும் பொருளா தார முன்னேற்ற சங்கத்தின் முதல் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மலைக்குறவன் இன மக்களின் வாழ்வுரி மைக்காக போராடும் சேலம் மாவட்ட மலைக் குறவன் பழங்குடியினர் கல்வி மற்றும் பொரு ளாதார முன்னேற்ற சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு ஆத்தூரில், வரவேற்புக்குழு தலை வர் பி.மனோகரன் தலைமையில் நடைபெற் றது. முன்னதாக, விநாயகபுரம் கோர்ட் முதல் பெரியார் சிலை வரை மலைக்குறவன் மக்க ளின் கலாச்சார பேரணி நடைபெற்றது. இப் பேரணியை அகில இந்திய ஆதிவாசிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை மத்தியக் குழு உறுப்பினர் ஏ.வி.சண்முகம் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எம்.ஆர். தனபால் வரவேற்றார். சிறப்பு அழைப்பாள ராக பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் இந்திய சமூக அறிவியல் ஆய்வுக்குழு ஆய் வுத் தலைவர் சி.மகேஸ்வரன் கலந்து கொண் டார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநி லத் தலைவர் பி.டில்லிபாபு சிறப்புரையாற்றி னார். இம்மாநாட்டில் ஆத்தூர் வட்டத்திற்குட் பட்ட கல்லாநத்தம், சாத்தப்பாடி, சதாசிவ புரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மலைக் குறவன் இன மக்களுக்கு இதுவரை இனச் சான்று வழங்கப்படவில்லை.

எனவே தடை யின்றி இனச்சான்று வழங்க வேண்டும். மலைக் குறவன் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். தாட்கோ மூலம் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். மலைக்குறவன் மக்கள் வாழும் கிராமங்களுக்கு குடிநீர், தெரு விளக்கு, சாலை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத்தர வேண்டும்.  2012 ஆம் ஆண்டில் நில அளவீடு செய்து 123 மலைக்குறவன் இன குடும்பத்திற்கு தென் னங்குடிபாளையம் அருகில் அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா இடத்தில் தொகுப்பு வீடு கள் கட்டிக் கொடுக்க வேண்டும். மலைக்குற வர் மகளிர் குழுவிற்கு மானியத்துடன் உதவி  வழங்க வேண்டும். நலவாரிய அட்டை தடை யின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்டத் தலைவராக மனோகரன், செயலாளராக தன பால், பொருளாளராக சரவணன் உட்பட 50  பேர் மாவட்டக்குழு உறுப்பினர்களாக தேர்வு  செய்யப்பட்டனர். இம்மாநாட்டில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முக ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொரு ளாளர் ஏ.பொன்னுசாமி, மாவட்ட துணைச் செயலாளர் டி.செந்தில்குமார், சிபிஎம் தாலு காச் செயலாளர் ஏ.முருகேசன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக் கள் கலந்து கொண்டனர்.