உடுமலை, ஜன.12- உடுமலை நகராட்சியின் 19 ஆவது நகர்மன்ற சிறப்புக் கூட்டம் நகராட்சி தலைவர் மத்தீன் தலை மையில் வெள்ளியன்று நடைபெற் றது. இக்கூட்டத்தில், உடுமலை நகராட்சியுடன் உடுமலை, குடிமங்க லம் ஒன்றிய 14 ஊராட்சிகளை இணைக்க தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. உடுமலை 1918 ஆம் ஆண்டு நக ராட்சியாக உருவாக்கப்பட்டு, 1983 ஆண்டு முதல் தேர்வுநிலை நகராட்சி யாக 7.41 சதுர கி.மீ., பரப்பில் அமைந் துள்ளது. 33 வார்டுகள் உள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 61.150 பேர் வசிப்பதாகவும், உடுமலை நக ராட்சியின் சராசரி ஆண்டு வருவாய் ரூ.32 கோடியே 11 லட்சத்து 22 ஆயி ரமாக உள்ளது. தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார் பில் கடந்த நவ.23 ஆம் தேதி அரசு ஆணையின் அடிப்படையில் நகராட் சிக்கு அருகில் உள்ள ஊராட்சிகளை இணைக்க நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வாயிலாக கருத்துரு அனுப்ப அறி வுறுத்தப்பட்டது. இந்நிலையில் வெள்ளியன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்டு, மாவட்ட ஆட்சியர், திருப்பூர் நக ராட்சி மண்டல இயக்குநர், சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் வாயி லாக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட் டது.
இதன்மூலம், நகராட்சியை சுற்றி யுள்ள, ஊராட்சிகளுக்கு, குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வச திகள் மேம்படுவதுடன், சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயரும். நகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்படும்போது, உடுமலை நக ராட்சி எல்லை, 30 சதுர கி.மீ., பரப்பில் அமைவதோடு, மக்கள் தொகை யும், சுமார் 3 லட்சமாக உயரும். அதன் அடிப்படையில், நகராட்சி சார்பில், உடுமலை நகராட்சிக்கு அரு கில் உள்ள, உடுமலை ஒன்றியத்திற் குட்பட்ட கணக்கம்பாளையம், பெரி யகோட்டை, போடிபட்டி,குறிஞ்சேரி, சின்னவீரன்பட்டி, கண்ணமநாயக்க னூர் 1, 2, ராகல்பாவி, கணபதிபாளை யம், பூலாங்கிணறு ஆகிய 9 ஊராட்சி களுடன் குரல்குட்டை ஊராட்சி மற் றும் குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள தொட்டம்பட்டி , புக்குளம், கோட்டமங்கலம் , பொன்னேரி ஊராட்சிகளையும் இணைக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டது. மேலும், திரு மூர்த்தி பஞ்சலிங்க அருவியிலி ருந்து, நகராட்சிக்கு நேரடியாக குடி நீருக்கான பிரதான குழாய் பழுதை சரிபார்க்கவும், வால்வுகளின் பழுதை நீக்கவும் ரூ.6 லட்சம் நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட மூன்று தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் மற்றும் நகர் மன்ற உறுப்பி னர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.