districts

img

மலைவாழ் மக்களின் பட்டாவிற்கு வீட்டுமனைகள் அளவீடு செய்து கொடுத்திடுக

தருமபுரி, ஜூன் 28- மஞ்சகொடும்பு பகுதி மலை வாழ் மக்களுக்கு வழங்கப்பட்ட பட் டாவிற்கான வீட்டு மனைகளை அள வீடு செய்து கொடுக்க வேண்டும் என  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க  மாநாடு வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பென்னாகரம் வட்டம் மாநாடு ஒகேனக்கல்லில் நடைபெற் றது. மாநாட்டுக்கு செல்வம் தலைமை வகித்தார். இதில், மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் அன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பென்னாகரம் பகுதி செயலாளர் வி.ரவி, விவசாய சங்க  நிர்வாகி குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.  இதில் ஒகேனக்கல் ஊட்டமலை  மஞ்சகொடும்பு பகுதியில் மலை வாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா  வழங்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேல் ஆகியுள்ளது. ஆனால் இது வரை வீட்டுமனைகள் அளவீடு செய்து தரப்படவில்லை. எனவே, அவர்களுக்கு உடனடியாக வீட்டு மனைகளை அளவீடு செய்து தர வேண்டும். மேலும் வீட்டுமனை இல் லாத மலைவாழ் மக்களுக்கு உட னடியாக வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும். மலைவாழ் மக்களுக்கு ஆதார் கார்டு ரேஷன் கார்டுகளை உடன டியாக வழங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.  பின்னர் நடைபெற்ற புதிய நிர் வாகிகள் தேர்வில், வட்ட தலைவ ராக பெருமாள், வட்ட செயலாள ராக செல்வம், பொருளாளராக ஒகே னக்கல் பெருமாள் உள்ளிட்ட 9 பேர் கொண்ட புதிய வட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.

இதேபோன்று வனநிலங்களில் அனுபவம் செய்துவரும் மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும் என  தருமபுரி மலைவாழ் மக்கள் சங்கத் தின் சிட்லிங் மலைகமிட்டி மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.   தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சிட்லிங் மலைகமிட்டி 4 ஆவது மாநாடு சிட்லிங் கிராமத்தில் நடைபெற்றது. ராஜி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் கே.என்.மல்லையன், மாவட்ட தலைவர் ஏ.கண்ணகி, மாவட்ட நிர்வாகிகள் பழனிச்சாமி, வெங்கடேசன்‌, அண்ணாமலை, சேரன், சுமதி, சேகர் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டசெயலாளர் எஸ்.கே. கோவிந்தன் வாழ்த்தி பேசினார்.  இதில், 2006 வன உரிமைச்சட் டத்தை அமல்படுத்த வேண்டும். பழங்குடி மக்களுக்கு சாதி சான்றி தழ் வழங்க வேண்டும். வனநிலங் களை அனுபவம் செய்துவரும் மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு அரசு வழங் கும் தொகுப்பு வீட்டிற்கு ரூ.10 லட்சம் வழங்கவேண்டும். சிட்லிங் ஊராட்சி யில் உள்ள மலைகிராமங்களுக்கு  குடிநீர், சிமெண்ட்சாலை, தெருவி ளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்ய தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பின்னர் நடைபெற்ற புதிய நிர்வா கிகள் தேர்வில், தலைவராக அண் ணாமலை, செயலாளராக கேசவன், பொருளாளராக சத்தியராஜ் உள் ளிட்ட 11 பேர் கொண்ட கமிட்டி  உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட் டனர்.