ஈரோடு, மார்ச் 26- அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அடையாள சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.12 ஆம் தேதியன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்து வது என மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் ஈரோடு மாவட்ட 4 ஆவது மாநாடு பவானிசாகரில் நடைபெற் றது. இம்மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் கே.என்.பாலு, துணை தலைவர் பி.மாரி முத்து, மாவட்டக்குழு உறுப்பினர் டி.சாவித் திரி, ஆர்.நட்ராஜ் ஆகியோர் தலைமை வகித் தனர்.
இம்மாநாட்டை மாநில செயலாளர் பி.ஜீவா துவக்கி வைத்தார். மாநில பொரு ளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாநில துணை செயலாளர் பி.ராஜேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச்செயலா ளர் எஸ்.நம்புராஜன் சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில், ஈரோடு மாவட் டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கும் அடையாள சான்று வழங்கிட வேண்டும். புதிதாக அடையாள சான்று வழங்கும்போதே உதவித்தொகை உத்தரவு, ஏடிஎம் கார்டு வசதி, ரயில் பேருந் தில் உதவியாளர் சலுகை சான்று உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உத்தரவாதப் படுத்திட வேண்டும். 100 நாள் வேலை திட்டத் தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர தெரிவு செய்யப்பட்ட வேலை, முழு ஊதியம் உள்ளிட்டவைகளை அமல்படுத்திட வேண் டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 12 ஆம் தேதியன்று சுமார் 5 ஆயி ரம் மாற்றுத்திறனாளிகள் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவது என மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இம்மாநாட்டில் சங்கத்தின் புதிய மாவட்ட தலைவராக டி.சாவித்திரி, சிறப்பு தலைவராக கே.எம். பாலு, செயலாளராக ஏ.சகாதேவன், பொருளாளராக வி.ராஜு உட்பட 24 பேர் கொண்ட புதிய மாவட் டக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர்.