districts

img

கட்டுமான பொருட்களின் விலையை அரசே நிர்ணயித்திடுக

உடுமலை, டிச.3- தமிழக அரசு கட்டுமான பொருட்களின் விலையை தனது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என சிஐடியு கட்டு மான சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  சிஐடியு கட்டிட கட்டுமான சங்கத்தின்  மடத்துகுளம் தாலுகா மாநாடு ஞாயிறன்று  தெண்டபாணி நினைவரங் கத்தில் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் டி.குமார்,  மாவட்ட தலைவர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா ளர் ஆர்.வி.வடிவேல், விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றி னர்.  இந்த மாநாட்டில் தற்பொழுது கடுமையான விலையேற் றத்தில் உள்ள கட்டுமான பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் விலைகளை நிர்ணயம் செய்ய வேண்டும். 60 வயதான அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரிய பணப்பலன்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  இதனை தொடர்ந்து, புதிய தாலுகா நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். இதில் தலைவராக சிவக்குமார், செய லாளராக ஆர். பன்னீர் செல்வம், பொருளாளராக எம். கருணாநிதி, துணை தலைவர்களாக தெண்டபாணி, மாரி முத்து, முருகன், கவிதா மற்றும் துணை செயலாளராக  கருப்புசாமி, நாராயணசாமி, வனிதா, மாணிக்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.