districts

img

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை- விவசாயிகள் ஆவேசம்

இளம்பிள்ளை, ஏப்.23- உயர்மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முன்நுழைவு அனுமதி வழங்கி யதை திரும்பப் பெற வலியுறுத்தி சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத் திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், சங்ககிரி யை அடுத்துள்ள தேவூரிலிருந்து குருமப்பட்டி வரை   விவசாய நிலங் களில் உயர்மின் கோபுரங்கள் அமைத்து, அதன்மூலம் மின்சாரம் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது . இதற்கு விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வெள்ளியன்று சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகையிட் டனர். அப்போது, இத்திட்டத்தை விவசாய நிலங்கள் வழியாக அமல் படுத்தாமல் சரபங்கா நதிக்கரை யோரம் கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும். விவ சாய நிலங்களில் மின்வாரியம் நுழைவதற்காக மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ள முன்நுழைவு அனும தியை ரத்து செய்ய வேண்டும்.  முன் நுழைவு அனுமதியை ரத்து செய்யும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இப்போராட்டத்தில் விவசாயி கள் சங்க சேலம் மாவட்ட செயலா ளர் ராமமூர்த்தி, மாவட்ட  துணைத் தலைவர் தங்கவேல்,  உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான அனைத்து விவசாய சங்கங்க ளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் பெருமாள், ராஜேந்திரன் உட் பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் போராட் டம் காரணமாக  அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சங்ககிரி உட் கோட்ட காவல் துணை கண்காணிப் பாளர் ஆரோக்கியராஜ்  தலைமை யில் ஏராளமான போலீசார் அப்பகு தியில் குவிக்கப்பட்டனர். இதன்பின் இதுகுறித்து தகவலறிந்து வந்த சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் வேடியப்பன் விவசாயிகளிடம் கோரிக்கைகளை மனுவாக அளிக் குமாறு கேட்டுக் கொண்டார்.  இதை யடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டு, தற்காலிகமாக விவசாயி கள் கலைந்து சென்றனர்.