சாலையோரம் கிடந்த குழந்தை மீட்பு
ஈரோடு, ஜூலை 17- ஈரோடு, சென்னிமலை சாலையில் புதனன்று சாலை யோரம் தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை மீட்கப்பட்டது.
ஈரோடு, சென்னிமலை சாலையில், ரங்கம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே ஒரு குழந்தை அழும் சப்தம் கேட்டது. அதனைக் கேட்டவர்கள் சென்று பார்த்த போது, ஒரு கட்டை பையில், பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது. தொப்புக்கொடி ரத்தம், உடலில் ரத்தங்கள் காயாமல் இருந் தது. சில மணி நேரத்துக்குள் பிறந்த குழந்தை என உறுதி செய்யப்பட்டது. அக்குழந்தையை மீட்ட காவல்துறையினர், தனியார் மருத்துவமனையில் முதுலுதவி செய்து பின், ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், அப்பகுதி யில் ‘சிசிடிவி’ பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்ற னர்.
நீலகிரிக்கு புதிய ஆட்சியர்
உதகை, ஜூலை 17- நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பை லட்சுமி பவ்யா புதனன்று பொறுப்பேற்றார்.
தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களை இடமாற் றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஈரோடு மாவட்ட வணிகவரித்துறை இணை ஆணையராக இருந்த லட்சுமி பவ்யா தண்ணீரு நீலகிரி மாவட்ட ஆட்சிய ராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நீலகிரி மாவட்டத் தின் பிரச்னைகளை அறிந்து தமிழக அரசின் நலத்திட்டங் களை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற் படாமல் தடுக்கவும், அத்தியாவசிய தேவைகள் பொதுமக்க ளுக்கு தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
தார்ச்சாலை வசதி கேட்டு மனு
தருமபுரி, ஜூலை 17- பாப்பிரெட்டிப்பட்டிக்குட்பட்ட ஜி.அண்ணாமலைப் பட்டிக்கு தார்ச்சாலை அமைக்கவேண்டும் என இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் செவ்வாயன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற் குபட்டது.ஜி.அண்ணாமலைப்படி கிராமம். இக்கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப் பகுதியில் உள்ள மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி களுக்கு செல்வதற்கு பேருந்தை பிடிக்க, சுமார் 5 கிலோ மீட்டர் சாலையில் நடந்து செல்ல வேண்டும். பெத்தூர் கிராமத் திற்கு சென்று அரூர், கடத்தூர், தருமபுரி ஆகிய இடங்க ளுக்கு செல்லமுடியும்.
அண்ணாமலைப்பட்டியிலிருந்து பெத்தூருக்கு 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார்ச்சாலை தற்போது, பழுதடைந்து கற்கள் நிறைந்த மண்சாலையாக உள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மட்டுமின்றி நடந்து செல்ப வர்கள் கூட பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மாணவர்கள் பொதுமக்கள் நலன் கருதி அண்ணாமலைப் பட்டி- பெத்தூர் சாலையை சீரமைத்து மீண்டும் தார்ச்சாலை யாக மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். முன்னதாக ஆட்சியரிடம் வாலிபர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட துணைத் தலைவர் குறளரசன் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்த னர்.
அணைகள் நிலவரம் (புதன்கிழமை)
பவானிசாகர் அணை
நீர்மட்டம்: 74.73அடி(105)
நீர்வரத்து: 16661கனஅடி
நீர்திறப்பு: 1105 க.அடி
மழையளவு: 2.6 மிமீ
சோலையார் அணை
நீர்மட்டம்:140.83/160அடி
நீர்வரத்து:7753.23 கனஅடி
நீர்திறப்பு:1069.91கன அடி
மழை அளவு: 62மிமீ
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்: 29.80/72 அடி
நீர்வரத்து: 3397கனஅடி
நீர்திறப்பு: 57 கனஅடி
மழை அளவு: 36 மிமீ
ஆழியார் அணை
நீர்மட்டம்: 95.80/120அடி
நீர்வரத்து: 3356கனஅடி
நீர்திறப்பு: 84 கனஅடி
மழையளவு: 15 மிமீ
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்: 28.39/60அடி
நீர்வரத்து: 22கனஅடி
நீர்திறப்பு: 28கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 78.25/90அடி
நீர்வரத்து:5184கனஅடி
நீர்திறப்பு: 118கனஅடி
கோவையில் இருந்து அபுதாபிக்கு விமானம்
கோவை, ஜூலை 17- கோவையில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமானம் ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று தனது முதல் சேவையை துவங்க உள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து, அபுதா பிக்கு இண்டிகோ விமான சேவை ஆகஸ்ட் 10 ஆம் தேதி யன்று முதல் இயக்கப்பட உள்ளது. இது காலை 7.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில் புறப்படும் இண்டிகோ விமா னம், பிற்பகல் 11.30 மணிக்கு அபுதாபி சென்றடையும். அபுதா பியில் பிற்பகல் 1 மணிக்கு கிளம்பும் இண்டிகோ விமானம், மாலை 6.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடை யும். வாரத்தில் 3 நாட்கள் அபுதாபிக்கு விமான சேவையினை இன்டிகோ நிறுவனம் இயக்க இருக்கின்றது. கோவையில் இருந்து இயக்கப்படும் மூன்றாவது சர்வதேச விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கோவையில் இருந்து அபுதா பிக்கு விமான சேவை துவங்க இருப்பது தொழிற்துறையி னர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.