districts

அரசுத்துறைகளில் தினக்கூலி ஓட்டுநர்களை நியமிப்பதை கட்டுப்படுத்த முதல்வருக்கு கோரிக்கை

தருமபுரி, பிப்.7- அரசுத்துறைகளில் தினக்கூலி அடிப் படையில் ஓட்டுநர்களை நியமிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலை மைச் சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமைச் சங்க  மாநிலத் தலைவர் எஸ்.தயாளன் தமிழக முதல்வர் மற்றும் தமிழக ஊரக வளர்ச்சி  மற்றும் உள்ளாட்சித்துறை இயக்குந ருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியி ருப்பதாவது, தமிழகத்தில் ஒவ்வொரு  மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சித்துறை யில் பல்வேறு அரசு ஊர்திகள் உள்ளன. இந்த வாகனங்கள் 15 ஆண்டுகள் பயன் படுத்தப்பட்டதால், தற்போது பயனற்ற வாகனங்களாக அறிவிக்கப்பட்டுள் ளன. அரசு சார்பில் புதியதாக ஜீப் மற்றும் கார்களின் வருகைக்காக அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தருமபுரி மாவட்டம் உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட் டங்களில் அரசு நிரந்தர ஊர்தி ஓட்டுநர்க ளுக்கு பணி வழங்காமல், தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்களை நிய மித்து அரசு உயர் அதிகாரிகளுக்கு வாக னங்களை இயக்கி வருகின்றனர். போதிய அனுபவம் இல்லமால் தினக் கூலி அடிப்படையில் வாகன ஓட்டுநர் கள் பணிபுரிவதால் அரசு உயர் அதிகாரி களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் மாதந்தோறும் ரூ.60 ஆயிரத் துக்கு மேல் ஊதியம் பெறும் ஓட்டு நர்களுக்கு வேலை வழங்காமல், தினக் கூலி அடிப்படையில் ஓட்டுநர்களை நிய மனம் செய்து வாகனங்களை இயக்குவ தால் தமிழக அரசுக்கு நிதியிழப்பு ஏற் படுகிறது. எனவே, தமிழகத்தில் ஊரக  வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை யில், தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர் களை நியமித்து பணிகள் வழங்குவதை கைவிட்டு, நிரந்தர பணியில் உள்ள அர சுத்துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பணி களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.