districts

img

தரமற்ற தார்ச்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அவிநாசி, செப்.24- அவிநாசி அருகே தர மற்ற தார்ச்சாலை அமைத்த  ஒப்பந்ததாரர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டுமென  மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருப்பூர் மாவட்டம், அவி நாசி ஒன்றியம், அய்யம் பாளையம் ஊராட்சி பகுதியில் சுமார்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசித்து வரு கின்றனர். இந்நிலையில், அய்யம்பாளையம்  ஊராட்சிக்குட்பட்ட வடுகபாளையம் பிரிவி லிருந்து செட்டியாபாளையம் வரை சுமார்  இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு, இரண்டு  நாட்களுக்கு முன்பு தார்ச்சாலை அமைக்கப் பட்டது. இந்த தார்ச்சாலையை கைகளால்  பெயர்த்து எடுக்கும் அளவிற்கு தரமற்ற தாக உள்ளது.  இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு  அமைக்கப்பட்ட தார்ச்சாலையை செப் பனிடும் பணி நடைபெற்றது. இச்சாலையை ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சாலையில் தாரை மட்டும் ஊற்றி சீரமைத் தனர்.  இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தின் மீது புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட  நிர்வாகம் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் தரமான தார்ச் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.