உடுமலை, ஜன.1- கனிமவளக் கொள்ளை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றி யங்களில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு களுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான குளம், குட்டை கள் உள்ளன. நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக இக்குளங்கள் உள்ளன. இந்நிலையில், தேசிய நெடுஞ் சாலைத்துறை (NHAI) சார்பில் நான்கு வழிச்சாலை பணிகள் உடுமலை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதற்காக அரசு சார்பில் குறைந்த கால அனுமதியில், ஒரு மீட்டர் ஆழம் மட் டுமே மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் தனியார் நிலங்களில் மண் அள்ள கனிமவளத்துறை, வருவாய்த்துறையில் முறைப்படி அனு மதி பெற்று உரிய கட்டணம் செலுத்தி, குறிப்பிட்ட அளவு ஆழம் மட்டுமே மண் எடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்நிலையில் உடுமலை ஒன்றியம், குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள கனிமவளங்களை விதி களை மீறி பல மீட்டர் ஆழத்தில் மண் கொள்ளை நடந்து வருகிறது. இதுகுறித்து வருவாய்த்துறை, கனிமவளத்துறை அதிகா ரிகள் மற்றும் காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை. மேலும் மண் எடுத்து வரும் லாரிகளில் எவ்வித வேக கட்டுபாடு இல்லாமல் அதிவேகமாக செல்கிறது. இதனால் சாலைகளில் மண் சிதறி விழுவதால் விபத்துகள் ஏற்படு கிறது. மேலும் டிப்பர் லாரிகளில் அதிகளவில் மண் எடுத்து செல்வதால் கிராமத்து இணைப்பு சாலைகள் பல இடங் களில் சேதமடைந்துள்ளது. இதனால் கிராமப்புறங்களில் பல லட்சம் மதிப்பில் போடப்பட்ட இணைப்பு சாலைகள் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக போடிபட்டி, கொங்கலக்குறிச்சி, பள்ளபாளையம் உள்ளிட்ட பல இடங் களில் மண் குவியலாக சாலையில் சிதறி புழுதி கிளம்பி இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மண் கொள்ளையை தடுக்க வேண்டிய அதிகாரிகளின் அலட்சியத்தால் கிராம இணைப்புச் சாலைகளை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுவதுடன், சுற்றுப்பகுதி விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவாகி உள்ளது. எனவே, அலட்சியமாக உள்ள அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.