districts

img

பூவல்மடுவு அரசு பள்ளிக்கு சுற்றுசுவர் அமைக்க கோரிக்கை

தருமபுரி, ஜன.28- பூவல்மடுவு அரசு பள்ளிக்கு சுற்றுசுவர் அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பூவல் மடுவு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி  யானது கிராமத்தின் ஒதுக்குப்புறமாக கரடு பகுதி யில் 3 மாடி கொண்ட கட்டடமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் தரை தளத்திற்கு மட்டும் வளாக பகுதிகளில் இரும்பு கேட் அமைத்து மற்ற இரண்டு தளத்தின் வளாகத்திற்கு கைப்பிடி சுவர் மட்டும் அமைத்து உள்ளனர். இதனால் வளா கத்தில் சுற்றும் மாணவர்கள் கீழே தவறி விழுந்து படுகாய மடையும் வாய்ப்புள்ளது.  அதுமட்டுமில்லாமல் பள்ளி முடிந்த பிறகு மாலை நேரங் களில் பள்ளியை பூட்டி விட்டு சென்றவுடன் அந்தப் பகுதி யில் சுற்றித் திரியும் சுமார் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் பள்ளி வகுப்பறை மற்றும் மாடியில் உலா வருகின்றன. இத னால் பள்ளி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.  மேலும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தி னால் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் பள்ளி வளா கத்திற்கு வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளி வளா கத்திற்குள் குரங்குகள் நுழையாதவாறு இரும்பு கேட் மற்றும் பள்ளிக்கு சுற்று சுவர் அமைத்து கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி யுள்ளனர்.