அவிநாசி, ஜூன் 19- சமுதாயக் கூடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியும் பணி தொடங்காமல் இருக் கும் நிலையில் உடனடியாக சமுதாயக் கூடம் கட்டுமானப் பணியைத் தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அவிநாசி செங்காடு கிளை சார்பில் அவிநாசி பேரூராட்சி அலுவல கத்தில் மனு அளித்துள்ளனர். அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு முத்து செட்டிபா ளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற் பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் முத்து செட்டிபாளையம் பகு தியில் சமுதாய நலக்கூடம் அமைப்ப தற்கு நிதி ஒதுக்கி இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. உடனடி யாக சமுதாய நலக்கூடம் அமைத்து தரக் கோரியும், இந்திரா நகர் பகுதியில் பழுதடைந்த சாக்கடை கால்வாயை புதிதாக அமைத்து தர கோரியும், கால் நடை மருத்துவமனை சாலையிலிருந்து சேவூர் ரோடு முத்து செட்டிபாளையம் பகுதியில் வேகத்தடை அமைக்க கோரி யும், அமைந்துள்ள வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூச வேண்டும் அல் லது முகப்பு விளக்கு அமைக்க வேண் டும் என கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செங்காடு கிளை சார்பில் கோரிக்கை மனு பேரூராட்சி செயல் அலுவலர், தலைவர் ஆகியோரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இம்மனுவை பெற்றுக் கொண்டு விரைவில் தங்கள் கோரிக்கை நிறை வேற்றித் தரப்படும் என தெரிவித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.பழ னிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் பழ னிச்சாமி, கட்டிட கட்டுமான சங்க ஒன் றிய செயலாளர் கனகராஜ், கிளைச் செயலாளர் அவினாசியப்பன், முன் னாள் கிளைச் செயலாளர் பாபு, வாலி பர் சங்க நிர்வாகி வடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.