பொள்ளாச்சி, பிப்.11- பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையின் முன்பு விபத்துகளை தவிர்க்கும் வகை யில், வேகத்தடை அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி - உடுமலை சாலையில் அமைந்துள்ள பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளி கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த சாலை யானது பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையாகவும், உடுமலை, பழனி செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது. தற்போது இந்த சாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அதிகளவிலான கனரக வாகனங்கள், பேருந்துகள் அதிகவேகமாக வந்து செல்கின்றன. இதன் வழியாக அரசு பொதுமருத்து வமனை அமைந்துள்ளதால், விபத்துகளும் அவ்வப் போது நடைபெறுவது வழக்கமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.