districts

img

கைத்தறி ஜவுளி ரகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை

சேலம், டிச.20- உள்நாட்டில் தயாரிக்கப்படும் கைத்தறி ஜவுளி ரகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி சேலத்தில் கைத்தறி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நாடு முழுவதும் ஜவுளி ரகங்கள் மீதான 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை வரும் ஜனவரி முதல் 12 சதவிகிதமாக உயர்த்தப்பட உள் ளது. இதனால் கைத்தறி ஜவுளி உற்பத்தி  தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட் டுள்ளது. எனவே, ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் மற்றும் திருச்செங்கோடு வட்டார கைத்தறி  ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் 100க் கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.