districts

img

அமராவதி ஆற்றில் மூழ்கி 6 பேர் இறந்த சம்பவம்: குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

திருப்பூர், ஜன.20- தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ஆறு பேரின் குடும்பத்தினருக்கு, நிவாரண உதவி வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழகமுதல்வருக்கு மனு அனுப் பப்பட்டது. திருப்பூர் அருகே இடுவாய் ஊராட்சி, அண்ணாமலை கார்டன் குடியிருப்பைச் சேர்ந்த 30 பேர்,  திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறை  பகுதியில் முனீஸ்வரன் கோவி லில் நடைபெற்ற கிடா வெட்டு  நிகழ்ச்சிக்கு கடந்த 17ம் தேதி சென் றனர். நிகழ்ச்சி முடிந்து திருப்பூர் புறப்பட்டு வரும் வழியில் தாரா புரம் அருகே அமராவதி ஆற்றில், அன்றைய தினம் மாலை குளிக்க சென்றனர். அப்போது ஒருவர் ஆழ மான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி னார். அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக சென்ற 8 பேர் நீரில் மூழ்கினர். இதுகுறித்து தக வலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் இருவரை உயிருடன் மீட்டனர்.  இருப்பினும், அமிர்த கிருஷ்ணன், சக்கர வர்மன், ஸ்ரீதர், ரஞ்சித், யுவன், மோகன் ஆகிய 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர் களின் குடும்பத்தினர், இடுவாய்  ஊராட்சிமன்றத் தலைவர் கே. கணேசனுடன் வியாழக்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு வந்து ஆட்சியர் எஸ். வினீத்திடம் நிவாரணம் கோரி மனு  அளித்தனர்.  இது குறித்து அவர் கள் கூறுகையில், அமராவதி ஆற் றில் மூழ்கி எங்கள் பகுதியை சேர்ந்த 6 பேர் இறந்து விட்டனர். நாங்கள் 6 மகன்களை இழந்து விட்டோம், மகன்களை நம்பி  இருந்த பெற்றோரின் நிலைமை  கவலைக்கிடமாக இருக்கிறது. வாழ்வாதாரமே இல்லாமல் இருக் கிறார்கள். எனவே, தமிழக முதல் வர் எங்கள் மீது கருணை கொண்டு, மகன்களை இழந்த குடும்பத்தின ருக்கு நிவாரண உதவி மற்றும் வேலைவாய்ப்பு வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற னர். இம்மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இவர் களின் கோரிக்கைகளின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.